பிளஸ் 1 துணை தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணை தேர்வில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 16 மற்றும் 17ல் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப் பட்டிருந்தது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக, 17ல், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே, பிளஸ் 1 தேர்வர்கள், விடைத்தாள் நகல் பெறுவது மற்றும் மறுகூட்டலுக்கு, நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.