பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்ஒரு மாணவருக்குஇரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால்,எதை ஆவணங்களில்

பின்பற்றுவது என தெரியாமல்தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

 

பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டபள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்உருவாக்கப்பட்டது.இதில், 2012 முதல்தகவல்கள் பதிவேற்றியும்தொழில்நுட்ப குளறுபடிகளால்தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.

 

 

 

கடந்தாண்டில்பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்குநாமினல் ரோல் எனப்படும் பொதுத்தேர்வு எண்எமிஸ்இணையதள தகவல் அடிப்படையிலே வழங்கப்பட்டன.

 

 

இத்தகவல் தொகுப்பை பயன்படுத்திஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட் கார்டு’ வழங்கவும்முடிவுசெய்யப்பட்டுள்ளதுஎனவேபுதிய மேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.

 

 

இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டதுதலைமையாசிரியர்களுக்கு,எமிஸ் இணையதளத்தை பயன்படுத்தும் முறைகுறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதுஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளும்ஒரே நேரத்தில்தகவல்களை உள்ளீடு செய்ததால்இணையதளம் முடங்கியது.

 

 

தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர்வகுப்புமுகவரிரத்த வகை முதற்கொண்டு, 40க்கும்மேற்பட்ட தகவல்களைஎமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்துபிரத்யேக எண் பெறப்பட்டது.

 

 

நடப்பாண்டில்புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமேஎமிஸ் எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களை,புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்த போதுமற்றொரு அடையாள எண் உருவாகியுள்ளதுஇதில் எதைகல்வி ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியவில்லை.

 

 

 

சர்வர் முடங்கியிருப்பதால்வரும் 4ம் தேதிக்கு பின்தகவல்களை இணைக்கலாம் எனமட்டுமேகல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்இரட்டை பதிவு எண் குறித்துதெளிவான விளக்கம் அளிக்கவில்லை’ என்றனர்