Meeting with School Education Minister Anbil Mahesh Poyyamozhi

Chennai : In view of the recent attacks on teachers and schools The Joint Action Committee of Tamil Nadu Private Schools’ Associations has demanded a special act to accord them protection.
Last year, a mob set fire to school vehicles and records after a protest over the suicide of a girl student turned violent in Kallakurichi.
And many incidents have been reported , in recent times where parents have beaten up teachers over a comeplaint of corporal punishment .
“Recently, there have been many attacks on teachers, staff and educational institutions.

School premises have become unsafe for teachers, staff and students in both government and private schools . We need a special act to prevent such attacks on schools .Such acts should be made non-bailable offences, and the cost for damage to the property should be collected from miscreants,” a representation from the Joint Action Committee of Tamil Nadu private Schools Association said.
There are around 19000 private schools in the state. The Joint Actions Committee has been formed by 18 private school Associations which met in Chennai on Thursday.
The representatives from the committee and over the representation to the school education minister Anbil Mahesh Poyyamozhi on Friday.

Meeting with Thiru Sanyam Bhardwaj IAS CBSE Controller of Examinitaion

Meeting with the CBSE officials in New Delhi to Solve the Burning issues SARAS and Oasis in getting affiliation.
Our recent,  meeting held in New Delhi  the National Independent Schools Alliance  dialogue with the CBSE   higher officials regarding the CBSE Burning issues .We were asked to meet the IAS Sanyam Bharadwaj, Controller of Examination, to address the issues of CBSE. The issues discussed during our Natiinal  Executive meeting
1. Sections issue
2.CWSN facilities
3.Lift / Ramp in existing schools.
4.Strength of class
5.Composite lab.
6.Training charges.
7.Increase in exam. center cost
8.Attendance inspection.
9.Refund of 75000 if paid.
10.Separating LOC and Saras.
11.Penelties

Regarding the resent issue
Meet  IAS Sanyam Bharadwaj, Controller of Examination, CBSE and submitted along with our National Team members our School Voice team recommendation and what are the possible solution can be done according to the current senorio accepted by CBSE

1.*Section Increase and Refund of Rs. 75,000*
CBSE has agreed to allow schools to increase or decrease the number of sections within the limits of approved sections. This process must be done through SARAS to avoid future inconveniences. For schools wishing to increase beyond the allotted sections, they will need to apply through SARAS and pay the relevant fee.
CBSE will also refund the Rs. 75,000 fee collected from the school during the section increase application process.

2.*Dual Recognition and NOC Challenges*
CBSE will send formal instructions to all state government departments regarding various NOCs (Land, Structural Safety, Fire, etc.) following the CBSE format.
CBSE will also explore the idea of implementing the model of getting certificates from the Empanelled Engineers.

3.*CSWN Infrastructure Compliance Timeline*

CBSE will revise the timeline for compliance with CSWN-related infrastructure requirements, providing schools with a more reasonable timeframe. The Board has requested a detailed representation of the challenges faced by schools in meeting infrastructure requirements. There will be amendments regarding the construction of a 6-foot-high brick wall with barbed wire as an alternative to a concrete compound wall.
The Rs. 50,000 non-compliance fee will also be reevaluated after discussions with the Chairman.

4.*Unaided Schools Board Results as a Separate Category*

Control of Examinations praised the contribution and  performance in the Board Exams which always keep highest pass percentage.
CBSE has agreed to publish board results for unaided schools as a separate category, allowing for a better understanding of the contributions of private schools.

5.*Benefits to Teachers and Principals*

Starting from the next academic year, there will be no evaluations on Sundays, and the evaluation period will be reduced to 7 days. Evaluation centers will be located closer to schools to facilitate teachers’ commutes.

RTE REIMBURSEMENT LATEST NEWS FROM SCHOOL VOICE (12.11.2021)

RTE REIMBURSEMENT LATEST NEWS FROM SCHOOL VOICE
அன்பு பள்ளி தாளாளர்களுக்கு
SCHOOL VOICE சார்பில் அன்பு வாழ்த்துக்கள்.
1) 2020 -21 கான RTE Reimbursement நேற்று நாங்கள் கல்வித்துறை அதிகாரிகளை  சந்தித்து ஏன் என்னும் இவ்வளவு தாமதம் ஆகிறது  என கேட்டு அறிந்தோம்.
2) RTE Reimbursement  delay கான காரணம் இன்னும் 2000  க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களது  EMIS  RTE Students தகவலை  சரி செய்து முடிக்கவில்லை என்பதே  ஆகும்.

3)இதில்   உயர்நீதிமன்றத்தில் RTE Reimbursement   குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,( நமது சங்கத்தின் சார்பிலும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு)  அனைத்து  பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில்  பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  பள்ளிக்கல்வித்துறை  அதிகாரிகள் இருக்கிறார்கள்.

4)ஆனால் SPD   மாநில திட்ட இயக்குனர் அவர்கள் EMIS  அடிப்படையில்தான் RTE Reimbursement கொடுக்கப்படும்   என தெரிவித்திருக்கிறார்கள்.

5) EMIS   படி  சரிசெய்யாத பள்ளிகள் கண்டிப்பாக தாமதமாக நேரிடும் என்பதை  மனதில் கொண்டு செயல்படுங்கள்.

6)Fee Committee order அல்லது  தமிழக அரசு அறிவித்துள்ள per child expenditure இவற்றில் எது  குறைவானதோ  அதனையே Reimbursement  ஆக நிர்ணயம் செய்து  உங்கள் பள்ளிக்கு வழங்கப்படும் .

7) பத்து நாட்களுக்குள் RTE  Reimbursement பணம் உங்களுக்கு வந்து சேரும் வாய்ப்பு இருக்கிறது    என்பதை DPI  கல்வித்துறை   அதிகாரிகளிடம்   மூலமாக பெற்ற தகவல்களை SCHOOL VOICE சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

8.)  தொடர்ந்து உதவிய  மாவட்ட நிர்வாகிகள்,  பள்ளி  நிர்வாகிகள் முதல்வர்கள் மற்றும் அனைவருக்கும்  எமது வாழ்த்துக்கள்.
கல்விப்பணியில் என்றும் தங்களுடன்.

Adv M.J.John- 9940051234
Adv.Martin Kennedy-9941334341

முப்பருவ கல்வி முறைக்கு தமிழகத்தில் மூடுவிழா?

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் நடப்பில்உள்ள முப்பருவ கல்வி முறை 5, 8, 9ம் வகுப்புகளுக்கு முடிவுக்கு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள்  தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் முழுமையான  தொடர் மதிப்பீடு என்ற புதிய முறையில் மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டது.அதனை போன்று 2013-14ம் கல்வியாண்டில் ஒன்பதாம்  வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது.முப்பருவ தேர்வு முறையில் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையில் 60 மதிப்பெண் பாடங்களுக்கு தேர்வு எழுதினால் போதும், 40 மதிப்பெண்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள்அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும்.ஆனால் 10ம்வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுவதில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் வரும் கல்வியாண்டு முதல்  9ம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்யகல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக 9ம் வகுப்பு பாட புத்தகங்களை மூன்று பருவங்களாக வழங்காமல் ஆண்டு முழுவதற்கும் சேர்த்து ஒரே புத்தகமாக தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய  அரசு அறிவித்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம்  கொண்டு வந்து மத்திய  அரசு இதனை அறிவித்தது.

மத்திய அரசின் சட்ட திருத்தத்தின்படி தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 5, 8 வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு  நடத்தப்படும்.தமிழகத்தில் தற்போது 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ கல்விமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.  முப்பருவ கல்வி முறையில் ஒரு பருவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அடுத்தடுத்த  பருவங்களில் கேட்கப்படுவது இல்ைல,தொடர்ந்து அந்த புத்தகங்களை மாணவர்கள் படிப்பதும் இல்லை.

வரும் கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தருவாயில் மூன்று பருவங்கள் சேர்த்து மொத்த மூன்று பருவ பாட புத்தகத்தையும் மாணவர்கள் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக முப்பருவ கல்விமுறை 1 முதல் 9ம் வகுப்பு வரை தொடர்ந்த நிலையில் அது 10ம் வகுப்பை எட்டவேயில்லை.

மாறாக அடுத்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 5ம்  வகுப்பு ஆகியவற்றுக்கு முப்பருவ கல்விமுறை மாற்றப்பட்டு பழைய கல்விமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாககல்வியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சில வகுப்புகளுக்கு முப்பருவ  கல்வி முறை கேள்வித்தாள் வடிவமைப்பும், மற்ற சில வகுப்புகளுக்கு முழு பாடதிட்டத்திட்டமும் என்றகுழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் கூட்டஅரங்கில் நேற்று கருத்தரங்கை நடத்தின.

தமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கத்தின் செயலாளர் என்.ஞானகுரு வரவேற்புரையாற் றினார். தலைவர் டாக்டர் சி.எஸ்.

ரெக்ஸ் சற்குணம் தலைமையுரை யாற்றினார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், ‘பொது சுகாதாரமும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி, ‘மருத்துவக் கல்வியும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேசியதாவது:

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை.

பள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய அளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாகஎடுத்துக்கொள்ள கூடாது.

300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர். பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
www.minnalkalvi.com
300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோமோ, அந்த நிலைக்கு இன்னும் 20, 30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும்.

தற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம் நாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய நிலை ஏற்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், முழு நேர, ‘நீட்’ பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, ‘நீட்’ பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இரண்டு ஆண்டுகளாக, கட்டாயமாக தேர்வு நடத்தப்படும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது, மிகவும் குறைவாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேரத்திலும், விடுமுறையில், சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 19ல், அனைத்து பொது தேர்வுகளும் முடியவுள்ள நிலையில், மார்ச், 23 முதல், முழு நேர நீட் பயிற்சி வகுப்பை நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள, 13 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில், உணவு, தங்குமிடம் வசதியுடன், இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெறும், 20 ஆயிரம் பேரில், அதிக மதிப்பெண் பெறும் நம்பிக்கையுள்ள, 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்கு, நீட் பயிற்சியில் அனுபவம் பெற்ற, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மையத்தினர் வழியாக, காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் – நடவடிக்கை பாய்கிறது

பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.
ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.
விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LKG & UKG க்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க (NCTE ) விதி இல்லை!

LKG முதல் மேல்நிலைக் கல்வி வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உண்டான உரிய கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம்  தேசிய ஆசிரியர் கல்வி குழுவிற்கு  (NCTE ) மட்டுமே உண்டு.

மேலும் ஆசிரியர்களின் நேரடி பணி நியமனத்தில் ,
அதற்குரிய கல்வி தகுதியில் தளர்வு (Relaxation) வழங்குவதற்கு உரிய அதிகாரம் NCTE க்கு  மட்டுமே உண்டு.

ஆனால் மேற்படி தளர்வு செய்யும் அதிகாரம் ,குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டது.

இந்த தளர்வானது ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மாறாக ஆசிரியர்களை கீழ்நிலைப்படுத்தி,
பணி மாற்றம் செய்யும் போது ,

மேற்படி பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதியை  தளர்த்தும் பொருட்டு, NCTE ஆனது மேற்கணட விதிகளைப் பயன்படுத்த இயலாது.

92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்

92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்

நாடு முழுவதும் 92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.

ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஆரம்பப் பள்ளியில் 23:1 இருக்க வேண்டும், உயர் ஆரம்ப பள்ளியில் 17:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், செகன்ட்ரி பள்ளிகளில் 27: 1 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் இருக்க வேண்டும்.

92,275 ஆரம்ப மற்றும் செகன்ட்ரி பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் ஓராசியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.

இதற்கு அடுத்த வரிசையில் உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், ஆந்திரா உட்பட 5 மாநிலங்கள் வருகின்றன.

டில்லியில் கூட 5 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்

தமிழக பட்ஜெட் 2019 – உடனடி தகவல்கள்..! – பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்…

வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்

* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை – துணை முதலமைச்சர்