குழந்தைகளுக்குஎதிரான பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்திட வேண்டிய பொறுப்புகள் பெற்றோர்களுக்குதான் அதிகமாக

இருக்கின்றதுஅதிலும்குறிப்பாக பெண்களுக்கு தான் அதிகம்.

 

ஏனென்றால்தந்தை வேலைக்கு சென்றவுடன் குழந்தையுடன் அதிக  நேரம் இருப்பது ஒரு தாய் தான்குழந்தை பள்ளி விட்டுவந்தவுடன் அல்லது விளையாடி விட்டு வந்தவுடன் என்று எல்லாவற்றையும் கண்காணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு தாய்க்குதான் கிடைக்கின்றது.

 

அதுபோன்றநேரங்களில் குழந்தைகளை நாம் எவ்வாறு பாலியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகளை பார்ப்போம்.

 

இளமை தொடக்கம் – குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலியல் ரீதியானபிரச்சனைகள் என்னஎன்பதை  புரியவையுங்கள்அவர்கள் வயதுக்கு வரவேண்டும் என்று  காத்திருக்காதீர்கள்.

 

உடல் உறுப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துங்கள்அந்தரங்க உறுப்புக்கள் தொடர்பான அறிவுறுத்தலையும் செய்யுங்கள்.

 

உடல் பாகங்களின் பெயர்களை சரியாக கூறுங்கள் – குழந்தைகளிடம் உடல் உறுப்புக்களின் பெயர்களை சரியாக சொல்லிக் கொடுங்கள்.

 

அப்பொழுதுதான் அவர்களிடம் யாரும் தவறாக நடந்துகொண்டால்அதை உங்களிடம் சரியாக கூறுவார்கள்.

 

 

இரகசியங்கள் இல்லாமல் பாருங்கள் – சில விஷமிகள் குழந்தைகளிடம் ஆபாசமான விஷயங்கள் அல்லது உடல்ரீதியான தொந்தரவுகள் செய்துவிட்டு, பெற்றோரிடம் கூறாதீர்கள் என்று சொல்லி நான் உனக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிதருகின்றேன் என்று கூறுவார்கள். அதுபோன்று, யாரும் கூறினால் வீட்டில் வந்து சொல்ல வேண்டும் என்றுகுழந்தைகளிடம்கூறுங்கள்.