கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇதனால்இந்தமையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லைகோவைநீலகிரிதிருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியபகுதியாகும்இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமேபல்கலையால்அங்கீகாரம் தர முடியும்அதேபோன்றுஇந்த எல்லையில் மட்டுமேதொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

 

ஆனால்பாரதியார் பல்கலை நிர்வாகம்சி.பி..பி., (Centre for Participatory and Online Programme), சி.சி..., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) எனபல்வேறு பெயர்களில், ‘எல்லை மீறி‘ தொலைதுார கல்வி மையங்களைபல ஆண்டுகளாக நடத்தி வருகிறதுஇதைத்தடுப்பதற்குதமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

 

380 கல்வி மையங்கள்

 

இதனால்வெளிமாநிலங்கள்வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க,பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளதுஇந்த மையங்களில்கலைஅறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றிமெடிக்கல்கவுன்சில்பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டுபட்டம் மற்றும்பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

 

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால்முறையாக வகுப்புகள்நடத்தப்படுவதில்லைவாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால்ஏராளமானமாணவர்கள் இதில் சேர்கின்றனர்இவர்களின் விடைத்தாள்களும்பெயரளவில் திருத்தப்பட்டுதேர்ச்சி தரப்பட்டுபாரதியார்பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

 

அதேநேரத்தில்அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில்பணத்தையும்பல ஆண்டுகளையும் செலவழித்துகஷ்டப்பட்டுபடித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லைஇதன் காரணமாககல்லுாரிகளை விடுத்து,இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதுதமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல்படிப்புகளுக்கான பட்டத்துக்குஎந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இதைக் கண்டித்துபல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால்தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல்கல்லுாரிகள் சங்கம் சார்பில்ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதுபாரதியார் பல்கலை பதிவாளர்பல்கலைமானியக்குழு செயலர்தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர்தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர்ஆகியோர்இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவருகிறதுஇந்நிலையில்பல்கலை மானியக் குழு சார்பில்அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக்சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம்பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும்பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும்என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனுபாரதியார் பல்கலை எந்தசட்டத்தையும்விதியையும்சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

 

பேராசிரியர் யஷ்பால்சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்தஉத்தரவின்படிமாநில பல்கலைக்கழகங்கள்தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்விமையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனுபல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

எல்லை மீறல்

 

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலைஅதன் எல்லைக்குட்பட்டகோவைநீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியதுமாவட்டங்களில் தொலைதுார கல்விமையங்களை நடத்தலாம்ஆனால்எல்லையைத் தாண்டிமையங்களை நடத்தி வருகிறது.

 

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள்தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவதுதொடர்பாகபல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்றுவிரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுஅதைபல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.

பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிபல்கலை வளாகத்திலும்அதன்எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் ‘கோர்ஸ்களை நடத்திபட்டங்களை வழங்கலாம்.

 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால்அதற்கு பல்கலை மானியக்குழுவிடம்முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்றுநாடு முழுவதும் உள்ள மாநிலபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘தங்களதுபல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில்இணைப்புக் கல்லுாரிகள்வளாக மையம்கல்வி மையம் போன்றவற்றைநடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

 

2016 மே 4 அன்றுஅனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவைஅமல்படுத்தும் வகையில்மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்மாநில எல்லையைத்தாண்டிபல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலபல்கலைக்கழகங்கள்தங்களது எல்லையைத் தாண்டிஇத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள்அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில்பல்கலைமானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பேஎந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

 

 

பட்டம் செல்லாது

 

ஆனால்பாரதியார் பல்கலைக்கழகம்பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும்அகில இந்திய தொழில் நுட்பகவுன்சில்இந்திய மெடிக்கல் கவுன்சில்இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்எதிலும் அனுமதி பெறாமலும்பட்டப்படிப்புபட்டயப்படிப்புஇளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை,சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

 

பல்கலையின் பெயர் மற்றும் ‘லோகோவுடன்இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால்பொது மக்கள்,மாணவர்கள்பெற்றோர்கள் எல்லோரும்இந்த மையங்களை நம்புகின்றனர்இந்த மையங்கள் அனைத்தும்சட்டத்துக்குவிரோதமாகவும்பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும்சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும்நடத்தப்படுவதால்இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம்சட்டப்படி செல்லாது.

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமானஎச்சரிக்கைகள்கடிதங்கள்இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல்இந்தமையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

 

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள்தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும்,பணத்தையும் இழந்துள்ளனர்எனவேபல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின்அடிப்படையில்உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறுஅந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலை மானியக்குழுவேபகிரங்கமாக இந்த மையங்களை ‘இல்லீகல்‘ என்று கூறியுள்ளதோடுஇந்த மையங்களில் தரப்படும்பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுஇதனால்இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கிவைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளதுஅத்துடன்சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலைநிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால்ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

 

 

எந்தஆண்டு முதல்?

 

கல்வியாளர்கள் கூறுகையில், ‘பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின்,பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது.இதுகுறித்துமானியக்குழுதான்மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்என்றனர்.

 

 

ஏன்எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

 

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள்வேலைக்குச்செல்வோர்உயர் கல்விக்கு விரும்பும் ஏழைமாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போதுஅவற்றை ஏன் மூட வேண்டும் என்றுபலரும் கேள்வி எழுப்புகின்றனர்இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதிகல்லுாரிகள் சங்கம்இதற்குக் கூறும் காரணங்கள்யோசிக்க வைப்பவை.

மாணவர்களிடம் ‘ரெகுலர் கோர்ஸ்‘ என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றனஆனால்இவை தொலைதுாரக் கல்வி என்பதுமட்டுமில்லாதுஇந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.

அரசாணைமுழு நேர ஆசிரியர்கள்ஆய்வுக்கூடம்நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.

கல்வி சார்ந்த அமைப்புகள்இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.

மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாதுபல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவானவருகை இருந்தால்ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.

மையங்களில் நடக்கும் தேர்வுமுறையாகக் கண்காணிக்கப்படாததால்நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஇதற்கானவிடைத்தாள் திருத்துவதும்மாலை 5:30 மணிக்குப் பின்முறையற்ற பணியாக நடக்கிறது.

கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும்இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரேமாதிரியான பட்டம் தரப்படுகிறதுஅதில்எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.

இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத ‘கோர்ஸ்களையும் இந்த ‘இல்லீகல்‘ மையங்களில் நடத்துகின்றனர்.

வகுப்புகள் நடத்தாமல்செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இந்த மையங்களால்பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறதுஅந்த அவப்பெயர்இதன் இணைப்புக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறதுஅவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

 

அனுமதி அளித்தோரே பொறுப்பு!

 

பிரின்ஸ் கஜேந்திரபாபுகல்வியாளர்பாரதியார் பல்கலையு.ஜி.சி., உத்தரவை மீறிஎல்லை தாண்டி தொலைதுார கல்விமையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பதுசட்டப்படி குற்றமாகும்கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால்,பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமேஇதன்மூலம் கிடைத்தகல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால்,இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களேபொறுப்பேற்க வேண்டும்பதவி உயர்வு காரணங்களுக்காகதொலைதுாரகல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போதுதன்னெழுச்சியாக மாணவர்கள்திரண்டு போராடுவது அவசியம்.

 

நிதியை நிறுத்த வேண்டும்!

 

பாலகுருசாமிஅண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்பாரதியார் பல்கலையின்அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த,தமிழக அரசாலும்யு.ஜி.சி.,யாலும் முடியும்பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டியயு.ஜி.சி.,மவுனம் சாதிக்கிறதுதமிழக அரசுக்குதுணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கமுழுஅதிகாரம் உண்டுசிண்டிகேட்கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றினால்துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாதுதொலைதுார கல்வி மையங்களால், ‘கரன்சி‘ கிடைப்பதால்தட்டி கேட்க வேண்டியவர்கள்வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்எதற்கெல்லாமோ போராடும்மாணவ சமுதாயம்தனக்கான கல்வி

வியாபாரமாவதற்கு எதிராகபோராட முன்வர வேண்டும்.

 

அப்பட்டமான சட்டவிரோதம்

 

.எம்.எம்.கலீல்தலைவர்தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்பல்கலை மானியக் குழுவேஇந்த மையங்கள்வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டதுஅதன் பின்னும்இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்தஅனுமதிப்பதில் துளியும் நியாயமில்லைஇது அப்பட்டமான சட்டவிரோதமாகும்மத்திய அரசுசுப்ரீம் கோர்ட் உத்தரவுகள்,பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறிசெல்லாத பட்டத்தைத் தருவதற்குஇந்த மையங்களை பல்கலைநிர்வாகமே நடத்தினால்அந்த பல்கலைக்கும்போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

 

இப்போதுபல்கலை மானியக்குழுவேஇதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்பல்கலைமானியக்குழுவின் முடிவுஎங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்பார்க்கலாம்.இவ்வழக்கில்நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

 

சுண்டல் வியாபாரமானது கல்வி!

 

 

பாடம்‘ நாராயணன்சமூக ஆர்வலர்பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில்மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்குஇதுபோன்ற காரணங்களால் தான்,அவப்பெயர் ஏற்பட்டதுசென்னை அண்ணா பல்கலையேபொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின்,திரும்ப பெற்றதுஏனெனில்தொலைதுார கல்வியில்தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறதுஇதில்வரும் லஞ்சத்தில்துணைவேந்தர்பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டுசுண்டல் வியாபாரம் போலகல்வியைகூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.