”நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவரவகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம்எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு

நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்தவருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி… எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.

 

 

இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும்பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒருவகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையைஉருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

 

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒருவகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத்தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனைவெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

 

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வுமுடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள்ஒலிக்காது.

 

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடுவெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித்தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

 

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தகவாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கியபுத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.

 

 

 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமதுபாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றிஅமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும்சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம்கண்டுகொள்ளாமல்விடப்படும்!”