நீட்‘ தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்குபள்ளிக்கல்வி இயக்குனர்

வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

 

 

 

 

3,௦௦௦ ஆசிரியர்கள்

 

 

 

நீட்‘ தேர்வால்தமிழக அரசு பள்ளி மாணவர்கள்மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாககல்வியாளர்களும்சமூகஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்இதன் அடிப்படையில்தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்‘ நுழைவு தேர்வுக்கான சிறப்புபயிற்சியைபள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.

இந்தபயிற்சிநவம்பரில் துவங்கப்பட உள்ளதுஇதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள்ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்புஅகாடமியில்சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

 

 

 

வழிகாட்டுதல்கள்

 

 

 

பின்தமிழக மாணவர்களுக்கு, ‘நீட்‘ மற்றும் ஜே..., தேர்வில் தேர்ச்சி பெறசிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில்நுழைவுதேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களைஆன் – லைனில் பதிவு செய்யபுதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்ஒரு வாரத்திற்கு முன்இணையதளத்தை துவக்கினார்இதையடுத்து,பதிவு செய்வதற்கானவழிகாட்டுதல்களைபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள்நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம்தமிழகத்தில்,412மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதுபயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

 

மாணவர்கள்தலைமை ஆசிரியர்கள் வழியாகhttp://tnschools.gov.in என்றஇணையதளத்தில்தங்கள் விபரங்களை பதிவு செய்யவேண்டும்இதற்குமாணவர்களுக்கு வழங்கப்பட்டஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.

 

பதிவுக்கு பின்ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்பயிற்சிதுவங்கும் நாள்நேரம் பின் அறிவிக்கப்படும் எனஇயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இரண்டு அரையாண்டு தேர்வு

 

 

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில்சிறப்பு கவனம் செலுத்தும்படிஅதிகாரிகளுக்கு,அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்இதையொட்டிபொது தேர்வு எழுத உள்ளவர்களுக்குசனிஞாயிறுகளில்மாலை நேரசிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

 

இந்நிலையில், 10ம் வகுப்புபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்பொது தேர்வுகளில்தனியார் மாணவர்களுக்கு நிகராகமதிப்பெண் பெற,அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்இதற்காகஅரசு பள்ளி மாணவர்களுக்குடிசம்பரில் நடக்கும்அரையாண்டு தேர்வுக்கு முன்மாதிரி அரையாண்டு தேர்வு நடத்தபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்அதற்குமுன்தேர்வுக்கான பாடங்களை முடித்துமாணவர்களை தயார் செய்யும்படிதலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.