NIOS என்றால் என்ன பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.*

*[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும்* *உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.*

*NIOS*

*தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்*

*சுருக்கம் NIOS*
*உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்டுகளுக்கு முன்னர்)*
*வகை அரசு பள்ளிக் கல்வி வாரியம்*
*தலைமையகம் நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா*
*அமைவிடம்*
*A-24/25,* *இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் – 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் – 201 309*

*ஆட்சி மொழி*
*இந்தி &  ஆங்கிலம்*

*தலைவர்*
*ஜே, ஆலம்*

*தாய் அமைப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)*
*வலைத்தளம் www.nios.ac.in*

*இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக திகழ்கிறது.*

*தற்போது தமிழில் தேர்வு எழுதலாம்*
*குறிப்பாக 3ம் வகுப்பு முதல் மருத்துவம் வரை இங்கே  பயிலலாம் பள்ளி இடை நின்றவர்கள்  10, 12 வகுப்புகளும் படிக்கலாம்.

EMIS – நாம் செய்ய வேண்டிய பணிகள் (UPDATE NEWS)

EMIS தளத்தில் தற்போது செய்ய வேண்டியது என்ன?
EMIS தற்போது புதிய வடிவில் திறக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள்

User name: dise code

Password: ssa officeல் பெறப்பட்டது

Google – emis – tnschool education department –

Enter your school username & password

பின்பு SIGN IN யை கிளிக் செய்க.

Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்

School mobile: HM mobile no கொடுத்தவுடன்      save மை கிளிக் செய்யவும்.

Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.

Step 3:
Student list – student profile (கிளிக் செய்யவும்) – student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV  என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் – பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student’s) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.

தற்போதைய தளத்தில் புதிய சேர்க்கைக்காக இன்னும் தரவுகள் கொடுக்கப்படவில்லை.. மாறுதல் பணி முடித்ததும்
விரைவில் சேர்க்கைக்காக திறக்கப்படும்.

Steps for New student entry:

EMIS site ல் dashboardற்க்கு அடுத்து உள்ள student என்பதை கிளிக் செய்யவும். பின்பு create student யை கிளிக் செய்யவும்.
Student registration form தோன்றும். இப்படிவம் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் எளிமை படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக student photo தேவையில்லை.
கோரப்பட்டுள்ள தகவல்களும் குறைவு (எளிமை).
1.student name
2.adhaar no
3.D.O.B
4.Gender
5.religion, community, sub caste
6.Mother tongue
7. Father/ mother name, occupation, income
8. Mobile no & address
9. Class, section, previous class, admission no, D.O.J, Medium ஆகிய தகவல்கள் மட்டும் போதுமானது
Submit யை கிளிக் செய்யவும்.

EMIS New registration ஒரே பக்கத்தில் முடிந்து விடும்

EMIS தளத்தில் நீல வண்ணத்தில் வரும் எழுத்துகள் மீது கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்

வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு வந்த மாணவரை admit செய்யும் முறை

EMIS site ல் student – student search என்ற வழிமுறையில் மாணவரின்
1. Emis no
2. Adhar no
3.mobile no
4. Last studied school dise code, class
5. Last studied school postal pincode, D.O.B இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் போதும் admit செய்து விடலாம்.

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 

இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

‘தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,’துாய்மை இந்தியா’ திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தை, ஒவ்வொரு துறைகளிலும் நடை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செப்., 15 முதல், இத்திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, அக்., 2 வரை, பள்ளிகளில் கட்டாயம் நடத்த வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

EMIS WEBSITE NOW OPEN (update News)

*EMIS WEBSITE NOW OPEN*

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது 

 

  1. SSA அலுவலகத்திலிருந்து புதிய password பெற வேண்டும்.

 

 

  1. பிறகு log in செய்து உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு சென்றவர்களை transfer செய்ய வேண்டும்.

DEEO meeting news:பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்.

DEEO meeting news:

1. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமைஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

4. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள்செய்ய வேண்டும்.

5. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.

EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்)

தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்

ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்

தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்

 

 

*How to transfer yourself* 

 

_

*தாங்களே இப்பணியை செய்ய கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்_*

 

Step1: go to Google search

Step 2: type www.emis.tnschool.com

Step 3:, USER ID is your Dise code (3303050…….)

Step 4 : 

PASSWORD Type ur new password (as u given on 5.9.17 &6.9.17 அல்லது பெரும்பான்மை பள்ளிக்கு த.ஆ தொலைபேசி எண்)

 

Step5: 

click in student pool. …

 

Click on class….

click on student EMIS number

See right top

click TRANFER button

அம்மாணவன் student pool க்கு சென்றுவிடுவர்…

தற்போது transfer மட்டும் தான் செய்ய வேண்டும்

*` *`😳😳😳😳😳😳😳😳😳😳` *New admition புதிய சேர்க்கை விரைவில் துவங்கும்* 😄😄😄😄😄😄😄

அப்போதும் மேற்கண்ட அதே படி நிலைகளையே செய்து Admit என்ற option பயன்படுத்தி 2முதல்-8 வகுப்பு வரை

*EMIS எண் உள்ள மாணவர்களை மட்டும் admit செய்ய வேண்டும்..* 

* *Transfer மற்றும் Admit செய்யும் மாணவர் விவரமும். 2 நகல்கள் எழுதி திங்கள் மாலைக்குள் குன்றத்தூர் கலப்பு பள்ளியிலும், படப்பை Aeo அலுவலகத்தில் சம்ர்பிக்கவும்*

 

மேற்கண்ட விவரத்துடன் உரிய படிவங்களுடன் வந்து பணிகளை 100% முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

முதல் மாணவர்கள் சேர்த்தலுக்கு தனியாக Emis format ல் தகவல் சேகரித்து வைக்கவும். அறிவிப்பு வந்ததும் பதிவேற்றம் செய்யவும்.

 

( Emis transfer / admit பணிகள் EMIS எண் உள்ள மாணவர்க்கு மட்டும்.

Emis எண் இல்லாமல் 2 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர் விவரம் சேகரித்து தனியே வைக்கவு

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கஅவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடு: புது திட்டம்

கோபி, ”கற்றல் குறைபாட்டை தீர்க்க, புது திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

 

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்த விபத்து ஏற்பட்டாலும், 24 மணி நேரத்தில், நிவாரணம் மேற் கொள்ளும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில், 1௦ சதவீத மாணவர்கள், கற்றலில் குறைபாடு உள்ளதாக புள்ளி விபரம் கிடைத்து

உள்ளது. இதை தீர்க்க, ஒரு புதிய திட்டம், அடுத்த மாதம் கொண்டு வரப்படும். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும், கல்வியை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றனர். ஒரு பங்கு இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மதிப்பெண்படி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் படித்த 30 முதல் 35 மாணவர்கள் வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 3 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்’ என்றனர்.