சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள்பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம்.6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரைவிநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் ‘முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ, அல்லது இணையதளத்தை (www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு… அதிகாரம்!

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை.
பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்.,30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது,பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், ‘டிவிசெய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள்ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில், காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, நமது  நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.’மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறதுஎன, அவர்தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, ‘எமிஸ்தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை: 2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்’பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, ‘வாட்ஸ் ஆப்பில் வதந்திகளை பரப்பினால், ‘சஸ்பெண்ட்
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, ‘சஸ்பெண்ட்செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்

EMIS தகவல்

👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

👉இவை student I’d card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

2018ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்:
01. ஆங்கில புத்தாண்டு – 01.01.18- திங்கள்
02. பொங்கல் – 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் – 15.01.18 – திங்கள்
04. உழவர் திருநாள் – 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் – 26.01.18 – வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி – 29.03.18 – வியாழன்
08 புனித வெள்ளி – 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 – ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் – 14.04.18- சனி
11. மே தினம் – 01.05.18 – செவ்வாய்
12. ரம்ஜான் – 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் – 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி – 13.09.18 – வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி – 02.10.18 – செவ்வாய்
19. ஆயுத பூஜை – 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி – 19.10.18- வெள்ளி
21. தீபாவளி– 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்

15 அரசுப் பள்ளிகளில் ‘நீட்’ பயிற்சி மையம்

கோவை : ‘நீட்தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில் முன்பதிவு செய்த மாணவர்களுக்காக, 15 அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு, 144 ஆசிரியர்கள் கொண்டு, வகுப்பு நடத்தப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வு உட்பட, அனைத்து போட்டித் தேர்வுகளையும், பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கு, மாவட்ட வாரியாக, சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம், நேற்றுமுன்தினம் (அக்., 31ம் தேதி) முடிந்தது. மாவட்டம் முழுக்க, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயிற்சி பெற விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, வட்டார வாரியாக, 15 அரசுப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கணிதம், இயற்பியல், வேதியியல், பயாலஜி உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, வகுப்பு எடுக்க, வட்டாரத்திற்கு மூன்று பேர் வீதம், திறன் மிகு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டம் முழுக்க, 144 ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இலவச பயிற்சிக்கு, இணையதளத்தில் பதிவு செய்த, அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.

 மாநில பாடத்திட்டத்தை முழுமையாக உள்வாங்கி படித்த பலர், நீட் தேர்வில், கடந்தாண்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். இருப்பினும், போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், பிரத்யேக சிலபஸ் தயாரித்து, மாணவர்களை வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. விரைவில் வகுப்புகள் துவங்கும்என்றனர்.

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்விசார் ஆவணங்களிலும், மாணவர்களின் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. உதவித்தொகை திட்டங்கள், இலவச திட்டங்களுக்கு கூட, மாணவர்களின் அடையாள எண்ணாக, ஆதார் எண் குறிப்பிடப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, தகவல்கள் முழுமையடைகின்றன. எனவே, ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண் பெறுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இயக்குனரின் சுற்றறிக்கை, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடுவோரின் விபரங்களில், ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களின் பெற்றோரிடம் கூறி, விரைவில் பெற்று, ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம்’ என்றனர்.

நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
‘ஹெல்ப் லைன்’மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், ‘ஹெல்ப் லைன்’ வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.