முப்பருவ கல்வி முறைக்கு தமிழகத்தில் மூடுவிழா?

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் நடப்பில்உள்ள முப்பருவ கல்வி முறை 5, 8, 9ம் வகுப்புகளுக்கு முடிவுக்கு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள்  தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் முழுமையான  தொடர் மதிப்பீடு என்ற புதிய முறையில் மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டது.அதனை போன்று 2013-14ம் கல்வியாண்டில் ஒன்பதாம்  வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது.முப்பருவ தேர்வு முறையில் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையில் 60 மதிப்பெண் பாடங்களுக்கு தேர்வு எழுதினால் போதும், 40 மதிப்பெண்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள்அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும்.ஆனால் 10ம்வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுவதில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் வரும் கல்வியாண்டு முதல்  9ம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்யகல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக 9ம் வகுப்பு பாட புத்தகங்களை மூன்று பருவங்களாக வழங்காமல் ஆண்டு முழுவதற்கும் சேர்த்து ஒரே புத்தகமாக தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய  அரசு அறிவித்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம்  கொண்டு வந்து மத்திய  அரசு இதனை அறிவித்தது.

மத்திய அரசின் சட்ட திருத்தத்தின்படி தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 5, 8 வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு  நடத்தப்படும்.தமிழகத்தில் தற்போது 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ கல்விமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.  முப்பருவ கல்வி முறையில் ஒரு பருவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அடுத்தடுத்த  பருவங்களில் கேட்கப்படுவது இல்ைல,தொடர்ந்து அந்த புத்தகங்களை மாணவர்கள் படிப்பதும் இல்லை.

வரும் கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தருவாயில் மூன்று பருவங்கள் சேர்த்து மொத்த மூன்று பருவ பாட புத்தகத்தையும் மாணவர்கள் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக முப்பருவ கல்விமுறை 1 முதல் 9ம் வகுப்பு வரை தொடர்ந்த நிலையில் அது 10ம் வகுப்பை எட்டவேயில்லை.

மாறாக அடுத்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 5ம்  வகுப்பு ஆகியவற்றுக்கு முப்பருவ கல்விமுறை மாற்றப்பட்டு பழைய கல்விமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாககல்வியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சில வகுப்புகளுக்கு முப்பருவ  கல்வி முறை கேள்வித்தாள் வடிவமைப்பும், மற்ற சில வகுப்புகளுக்கு முழு பாடதிட்டத்திட்டமும் என்றகுழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் கூட்டஅரங்கில் நேற்று கருத்தரங்கை நடத்தின.

தமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கத்தின் செயலாளர் என்.ஞானகுரு வரவேற்புரையாற் றினார். தலைவர் டாக்டர் சி.எஸ்.

ரெக்ஸ் சற்குணம் தலைமையுரை யாற்றினார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், ‘பொது சுகாதாரமும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி, ‘மருத்துவக் கல்வியும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேசியதாவது:

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை.

பள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய அளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாகஎடுத்துக்கொள்ள கூடாது.

300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர். பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
www.minnalkalvi.com
300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோமோ, அந்த நிலைக்கு இன்னும் 20, 30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும்.

தற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம் நாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய நிலை ஏற்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், முழு நேர, ‘நீட்’ பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, ‘நீட்’ பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இரண்டு ஆண்டுகளாக, கட்டாயமாக தேர்வு நடத்தப்படும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது, மிகவும் குறைவாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேரத்திலும், விடுமுறையில், சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 19ல், அனைத்து பொது தேர்வுகளும் முடியவுள்ள நிலையில், மார்ச், 23 முதல், முழு நேர நீட் பயிற்சி வகுப்பை நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள, 13 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில், உணவு, தங்குமிடம் வசதியுடன், இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெறும், 20 ஆயிரம் பேரில், அதிக மதிப்பெண் பெறும் நம்பிக்கையுள்ள, 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்கு, நீட் பயிற்சியில் அனுபவம் பெற்ற, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மையத்தினர் வழியாக, காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் – நடவடிக்கை பாய்கிறது

பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.
ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.
விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LKG & UKG க்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க (NCTE ) விதி இல்லை!

LKG முதல் மேல்நிலைக் கல்வி வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உண்டான உரிய கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம்  தேசிய ஆசிரியர் கல்வி குழுவிற்கு  (NCTE ) மட்டுமே உண்டு.

மேலும் ஆசிரியர்களின் நேரடி பணி நியமனத்தில் ,
அதற்குரிய கல்வி தகுதியில் தளர்வு (Relaxation) வழங்குவதற்கு உரிய அதிகாரம் NCTE க்கு  மட்டுமே உண்டு.

ஆனால் மேற்படி தளர்வு செய்யும் அதிகாரம் ,குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டது.

இந்த தளர்வானது ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மாறாக ஆசிரியர்களை கீழ்நிலைப்படுத்தி,
பணி மாற்றம் செய்யும் போது ,

மேற்படி பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதியை  தளர்த்தும் பொருட்டு, NCTE ஆனது மேற்கணட விதிகளைப் பயன்படுத்த இயலாது.

92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்

92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்

நாடு முழுவதும் 92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.

ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஆரம்பப் பள்ளியில் 23:1 இருக்க வேண்டும், உயர் ஆரம்ப பள்ளியில் 17:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், செகன்ட்ரி பள்ளிகளில் 27: 1 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் இருக்க வேண்டும்.

92,275 ஆரம்ப மற்றும் செகன்ட்ரி பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் ஓராசியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.

இதற்கு அடுத்த வரிசையில் உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், ஆந்திரா உட்பட 5 மாநிலங்கள் வருகின்றன.

டில்லியில் கூட 5 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்

தமிழக பட்ஜெட் 2019 – உடனடி தகவல்கள்..! – பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்…

வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்

* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை – துணை முதலமைச்சர்

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை!

அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை
EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது…
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே…
அதாவது…
ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.

அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.

அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை…

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:  பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக,  கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.
விலையில்லா பொருள்கள்:  புத்தகப் பைகள்,  நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டுதல்,  ஆய்வகங்கள்,  கழிப்பறைகள்,  பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது

‘5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா?’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்!

“இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா?”
APP-ல் படிக்க
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்குத் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இப்புதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் எதிர்க்கும் முக்கியமான அம்சம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்பதை. சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதுவும் இந்த ஆண்டு முதலே நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ஆதரவு என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி மக்கள் அதிகம் வாழுமிடம். அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் மகாலட்சுமி அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவரின் கருத்தை ஒரு கடிதமாக அளித்திருந்தார்.

5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பவர்களுக்கு, வணக்கம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு முதலில் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை இவ்வரசு எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), நடைமுறை ஏப்ரல் 1, 2010-ன் படி நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.

* 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

* இவ்வாறு சேர்க்கப்படும்
குழந்தைகளிடம் வயதுச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது.

* தேர்வு எதையும் வைக்கக் கூடாது.

* சேர்க்கை மறுப்பு எவ்வகையிலும் கூடாது.

சட்டம் இப்படி வரையறுத்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தமிழக அரசு கட்டாய பொதுத்தேர்வை வைக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி அளிப்பதும் கல்வி பெறுவதும் கட்டாயம். ஆனால், சாமானியக் குழந்தைகளிடமிருந்து கல்வியைப் பறிக்கும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 99.9 சதவிகிதம் பழங்குடியின மக்கள் மட்டும்தான். இவர்களுக்கென்று சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டைச் சீரமைத்து, பயிர் செய்து மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைத்துவிடுவர். விவசாய அறுவடை முடிந்ததும் கேரளாவுக்கு மிளகு எடுக்கச் செல்வார். வேறு வேலை இல்லாத பட்சத்தில் வேறு வழியுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் வருவர். குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. கைக்குழந்தை வைத்திருந்தால் அந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள வளர்ந்த, பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஒருவேளை குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு சென்றாலும் பார்த்துக்கொள்ள ஆளில்லை.

அந்த ஐந்து மாதங்களில் சம்பாதித்து வருவதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். இப்படி வாழ்வாதாரத்துக்காக ஓடி உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் ஜவ்வாதுமலையில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா? கேரளா சென்று வந்த உடனே பொதுத்தேர்வா என அஞ்சி ஒரேடியாகப் பள்ளியைவிட்டு ஓடவைக்கும் சூழலைத்தான் கல்வித்துறை உருவாக்கப்போகிறதா?

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இன்றளவும் எங்கள் பள்ளியில் நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. இனிமேலும் நடக்கும். படிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டமே துணையாய் இருந்துவருகிறது. என்னைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி வருகின்றனர். உதாரணத்துக்கு சிவரஞ்சனியைப் பற்றிச் சொல்கிறேன்.

2016-17-ம் கல்வி ஆண்டில், எங்கள் ஊரின் டெய்லர் ராமகிருஷ்ணன் அண்ணன், 12 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் அவரின் அம்மாவையும் அழைத்துவந்து, `டீச்சர், இவங்க எனக்குத் தூரத்து சொந்தம். இந்தக் குட்டிபொண்ணோட அப்பா, மாடு முட்டி இறந்துட்டாரு. கடன் தொல்லை அதிகமாயிருந்ததால், இவங்க குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான். இப்போ ஓரளவு கடனை அடச்சிட்டாங்க. இந்தப் பொண்ணு, படிக்க ஆசைப்படறதா இவங்க சொன்னாங்க. நீங்க இருக்கும் தைரியத்துல அழைச்சிட்டு வந்துட்டேன். எப்படியாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோங்க’’ என்றார். நான் அந்தச் சிறுமியிடம் பேசினேன்.

`ஏன்டாம்மா, நீங்க கேரளாவுல பள்ளிக்கூடத்துக்கு எதாவது போனிங்களா?’’

“இல்லிங்க மிஸ்.’’

“இப்போ 5-ம் வகுப்புல சேர்த்தா உங்களால படிக்க முடியுமா?’’

“கண்டிப்பா முடியும் மிஸ். எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். எப்படியாவது என்னைச் சேர்த்துக்கோங்க’’ என்றாள் நம்பிக்கையோடு. நான் ராமகிருஷ்ணன் அண்ணனிடம்,

“இவங்க அம்மா இங்கேயே இருப்பாங்களா இல்ல, மறுபடியும் கேரளாவுக்குப் போய்டுவாங்களா?’’

“போய்டுவாங்க மிஸ்.’’

“அப்போ. ஸ்கூல் லீவ் விட்டா யார் வீட்டுக்கு இந்தக் குழந்தை போகும்?’’

“அவங்க சித்தி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போய்டும் டீச்சர்.’’

“சரிங்க அண்ணா. பள்ளியில சேர்த்துடலாம். அதுக்காகத் தனியா சட்டமே இருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க’’ என்று தைரியம் கூறினேன்.

அந்தக் குழந்தையின் அம்மா, “ரெண்டு ஆம்பள பசங்களும் இருக்கானுங்க. ஒருத்தனுக்கு 5 வயசு, இன்னொருத்தனுக்கு 6 வயசு. இன்னும் ஒருமாசம் கழிச்சிக் கூட்டிட்டு வந்தா பள்ளிக்கூடத்துல சேர்த்துப்பீங்களா?’’ என்று கேட்டார். `தாராளமாக அழைச்சிட்டு வாங்க’ என்று கூறி அனுப்பினேன்.

இப்படி வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைதான் சிவரஞ்சனி. பள்ளியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் தமிழை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறுசிறு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தார். கொத்தடிமையாய் சிறுவயதிலிருந்தே கடனை அடைக்கும் தொழிலாளியாக இருந்ததால், அவளுக்கு வாழ்க்கைக் கணக்கின் மூலமே அடிப்படை கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க, சீக்கிரமே பழகிக்கொண்டார். முதலிரண்டு வகுப்புப் பயிலும் சில குழந்தைகளைக் குளிக்க வைத்தல், துணி துவைத்துக்கொடுப்பது, சாப்பாடு ஊட்டிவிடுவது, தலைசீவி விடுவது என நிறைய உதவிகளை இன்றளவும் செய்துவருகிறார். நடனம், பாட்டு, கதை எழுதுதல், ஓவியம் எனத் தன்னால் இயன்ற அனைத்திலும் சிறப்பாகப் பங்கெடுக்கிறார்.
உள்வாங்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் அபாரம் அவளுக்கு. எப்படியாவது கல்வி கற்று, சாதித்துவிட வேண்டுமென்ற முழுமூச்சில் களத்தில் இருக்கிறார். இப்போது 7-ம் வகுப்பில் படித்து வருகிறாள். அன்று கொத்தடிமைத் தொழிலாளி… இன்று குழு ஆசிரியர்.

நிறைய குழந்தைகளை இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 2, 3 & 4-ம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்த்திருக்கிறேன். ஆனால், சிவரஞ்சினிதான் 5-ம் வகுப்புக்கு முதல் அனுபவமாக அமைந்தார் எனக்கு.

எத்தனை குழந்தைகள் சிவரஞ்சினிபோல வேகமாகக் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள்? மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

ஒரு வகுப்பில் பயிலும் 10 விழுக்காடு குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளாக இருப்பார்கள் என. பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. படிக்க இயலாத எத்தனைக் குழந்தைகளுக்கு  dyslexia, dysgraphia, dyscalculia மற்றும்  A.D.D (Attention Deficit Disorder) இருக்கிறது என்று நுணுக்கமாகக் கண்டறியப்பட பணிகள் எவ்வளவோ இருக்கிறது! அவற்றையெல்லாம் களைவதை விடுத்து, அடித்தட்டுக் குழந்தைகள் இந்தத் தேர்வுகளை நடத்துவது அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கல்வியைக் கருவிலேயே அழிப்பதற்குச் சமமாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உட்கிரகிக்கும் திறன் வேறுபடும். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. உளவியல் சார்ந்த பல்வேறு காரணங்களை ஒவ்வொரு குழந்தையின் கற்றலுக்கும் பொருத்தலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம் தங்களின் அதிகார முடிவுகளால் என்பதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்துத் தேர்வு மட்டுமே அறிவு என நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் கல்வி முறையில், அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது தற்போது புதைக்கப்படும் அபாயத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் என்னும் தலைப்பில் உரையாடுவது போன்று உள்ளது தமிழகக் கல்வித்துறையின் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது. கடைக்கோடி கிராமங்களின், வனவிலங்குகள் நடமாடும் உள்மலை கிராமங்களின் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த முடிவை நிறுத்தி வையுங்கள்.