ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம் பிடித்தனர். தினக்குளம் அரசுப் பள்ளி கட்டடம் தரமற்ற பொருள் கொண்டு கட்டப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியது.
பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐகோர்ட் மதுரைக் கிளை தாமாக விசாரணை நடத்தியது. பின்னர் பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்கள் கேள்விக்கு பதிலதர முடியாமல் ஓட்டம் பிடித்தனர்
School Voice
Tamilnadu All Private Schools Association