ரேஷன் கார்டுகளில், ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளதாவது:
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், ‘2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்’ என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.