பிளஸ்2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச்8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள்மூலம் சுமார் 20 லட்சம் மாணவ,
மாணவியர்மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ்2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளைஎடுத்துபடிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுதவேண்டும். வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாகசெய்முறைத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்தவாரம் சென்னையில் நடக்கஉள்ளது. இதில்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பிளஸ்2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும், பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் மாலையிலும் நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
அறிவியல்பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள்குழுக்களாகபிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒருகுழு வீதம் செய்முறைத் தேர்வுக்குஅனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்புமாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம்முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள்முடிக்கதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு செய்முறைத்தேர்வுக்கானஅட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்