நீட்’ பயிற்சிக்கு வராமல், ‘டிமிக்கி’ : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர்.

சவால் : அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 – 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது. இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்.

சஸ்பெண்ட் : எனவே, முதல் கட்டமாக, நீட் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால், டிமிக்கி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ‘சஸ்பெண்ட்’ செய்யவும், சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

‘புதிய ஆசிரியர்கள்?’ : ‘நீட்’ பயிற்சியை புறக்கணிப்பது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, புதிய முறையில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்து, பொது தேர்வுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது.இந்த நேரத்தில், நீட் பயிற்சியில், ஆசிரியர்களால் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால், நீட் பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை, அரசு நியமிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

  • 01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள்

பேசுதல்.

  • பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம்

சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும்.

  • மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி

அலுவலர்கள்,பள்ளி ஆய்வாளர்கள்அனைவரும்பள்ளிமாணவர்களுக்குதூய்மைசார்ந்த விழிப்புணர்வுக்

குறிப்புகளை வழங்குதல்.

  • துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை

வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும்(Swachta Shapath Day)நிகழ்ச்சியினை நடத்தி

அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல்.

  • மாவட்டம்வாரியாக உறுதிமொழிஏற்றமொத்தமாணவர்களின் எண்ணிக்கையினையும்புகைப்படம்,

வீடியோமற்றும் விளம்பரவாசகங்களையும் மாநிலத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும். (காலை

12.00 மணிக்குள்ளாக)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*02.09.2018 முதல் ஞாயிற்றுக்கிழமை 04.09.2018 வரை செவ்வாய்க்கிழமை வரை*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

  • பள்ளி மேலாண்மைக் குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தி, ஆசிரியர் மற்றும்

பெற்றோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும்,

மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் வீட்டில் இப்பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில்

ஊக்குவித்தல்.

  • பள்ளியில்உள்ளஒவ்வொருபகுதியையும் ஆசிரியர்கள் ஆய்வுசெய்து அதனைகத்தம்செய்திடத்

தேவையான முன்மொழிவுகளையும்,திட்டங்களையும் தயார் செய்தல்.

  • கழிவறைகள், சமையலறை, வகுப்பறைகள், மின் விசிறி, புதர்கள் ஆகியவற்றைச்ச சுத்தம் செய்யத்

தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்திட

உரிய நடவடிக்கை எடுத்தல்.

  • மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்த பள்ளிகயின் எண்ணிக்கையினையும் புகைப்படம், வீடியோ மற்றும்

விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். (மாலை 4.00

மணிக்குள்ளாக)

பூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

 

தோல்வி

தோல்வியில் முடிந்தது

கடந்த டிசம்பர் 7, 1995ல் நாசா கலிலியோ என்ற சோதனை சாதனத்தை விண்ணுக்கு அனுப்பியது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கி 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது. ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பது எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரிய சிகப்பு புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.

 

 

 

கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்துள்ளனர்

 

இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது. இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.

 

 

 

சிவப்பு புள்ளி

சிவப்பு புள்ளியில் உள்ளது

 

அதன்படி, வியாழனில், பெரிய அளவில் செந்நிற புள்ளி ஒன்றுள்ளது. இதன் அளவு ஆசிய கண்டத்தை விட பெரிதாக இருக்கும். இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் இதை கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

தண்ணீர்

எவ்வளவு தண்ணீர்

 

தற்போது, வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர். மேலும், மொத்தமாக அந்த கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி

சென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, ‘அப்ஜெக்டிவ்’ முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 – 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

கல்வித்துறையில் இருள் – உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?

 

 

உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

 

வெளிப்படைத்தன்மை

 

ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

 

நீதிமன்றத்தில் வழக்கு

 

அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

 

தண்டனையா? பரிசா?

 

கடைசியில் ஜனநாயக மாண்பு நிறைந்த பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு விட்டார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துவிட்டது. இடமாற்றம் செய்திருப்பது, கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்ததற்கு உதயசந்திரனுக்கு கிடைத்த மோசமான தண்டனையா? அல்லது அவர் செய்த சீர்திருத்தத்திற்கு கிடைத்த பரிசா? தெரியவில்லை!

 

உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?ஒளி கொடுப்பாரா?

 

அனைவரது எதிர்பார்ப்பும் அதுவே!!!

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு

மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.

அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம்

நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலே 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 7 கிலோ வரை புத்தக பையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எனவே என்சிஇஆர்டியில் பாடத்திட்டத்தையே சிபிஎஸ்இ- யும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Government Examination,

DPI campus,

College Road,

Nungampakkam,

Chennai – 600 034.

Ph: 044-2827 8286, 044-2822 1734.

email: dgedirector@gmail.com

Web: www.tn.gov.in/dge

புதிய பாடத்திட்டம் – உரிய பயிற்சியின்றி தேர்வா? ஆசிரியர்கள் குற்றச்சாட்டு!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையைமேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள்தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில்,’கியூ.ஆர்., கோடு’ உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில்புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.

ஆசிரியர்கள் கூறுகையில், ’ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். ’பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்கின்றனர்