EMIS – முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?

EMIS – முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய

முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

 

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது

 

SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,

 

  1. Go to School Profile

 

  1. Class-Wise no of Sections .

 

  1. Add class And Section Details

 

  1. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

 

பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.

புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது

1.go to student

  1. create new child list

பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.

 

தேவைப்படும் முக்கிய விவரங்கள் 

 

1.மாணவரின் தொலைபேசி எண்

2.மாணவன் சேர்ந்த தேதி

3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற  முடியாது)

 

4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தர வேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)

5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாக காண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்

  1. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை

7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இரு நபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்

  1. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)
  2. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண், செக்‌ஷன், மீடியம்(பயிற்று மொழி) முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்

STUDY MATERIALS……… வியாழன் தோறும் பள்ளிகளில் ‘டெங்கு’ விழிப்புணர்வுக்கு உத்தரவு Posted: 04 Oct 2017 04:31 PM PDT சென்னை: வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்  டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்  உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்  நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., – தேசிய மாணவர் படையான, என்.சி.சி., – இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்  மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

 

பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 

l பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

l டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்

l டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்

l உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்

l நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., – தேசிய மாணவர் படையான, என்.சி.சி., – இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்

l மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : பள்ளி மாணவர்களுக்கு போட்டி

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ் மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 

விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ – மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியரிடம், உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று, போட்டி நடக்கும் நாளில், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை அல்லது உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும்.

 

போட்டிக்கான தலைப்பு, போட்டி துவங்கும் போது அறிவிக்கப்படும். போட்டி முடிவுகளும், அன்றே அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

90 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சம் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையால், விரைவில், மருத்துவ விபத்து காப்பீடு வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், விபத்து மற்றும் இயற்கை பேரிடர்நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது, உரிய சிகிச்சை கிடைப்பது சிக்கலாக உள்ளது. பலர், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.

எனவே, மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை, இலவசமாக மருத்துவ விபத்து காப்பீடு வழங்கவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, விபத்து காப்பீடு பதிவு செய்யப்பட உள்ளது.இதற்கான பணிகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் துவங்கி உள்ளது. இரு மாதங்களில், விபத்து காப்பீடுக்கான தனியார் நிறுவனத்தை இறுதி செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! – செங்கோட்டையன் தகவல்

திருச்சியை அடுத்த முசிறி அருகில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளைத்

தொடங்கிவைக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம்திருச்சி வந்தார்பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகுப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது

 

 

அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது.  முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள்குறித்து  15 நாள்கள் பெற்றோர்கள்கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும்இந்தக் கருத்துகளின் அடிப்படையில்அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளைஎதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும்மேலும்அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும்மாணவமாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்அதில் மாணவர்களின் ஆதார் எண்ரத்த வகை குறிப்பிடப்படும்.பள்ளி மாணவர்கள்டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

’எமிஸ்’ இணையதளத்தில் இரட்டை எண்கள்!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்ஒரு மாணவருக்குஇரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால்,எதை ஆவணங்களில்

பின்பற்றுவது என தெரியாமல்தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

 

பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டபள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்உருவாக்கப்பட்டது.இதில், 2012 முதல்தகவல்கள் பதிவேற்றியும்தொழில்நுட்ப குளறுபடிகளால்தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.

 

 

 

கடந்தாண்டில்பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்குநாமினல் ரோல் எனப்படும் பொதுத்தேர்வு எண்எமிஸ்இணையதள தகவல் அடிப்படையிலே வழங்கப்பட்டன.

 

 

இத்தகவல் தொகுப்பை பயன்படுத்திஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட் கார்டு’ வழங்கவும்முடிவுசெய்யப்பட்டுள்ளதுஎனவேபுதிய மேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.

 

 

இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டதுதலைமையாசிரியர்களுக்கு,எமிஸ் இணையதளத்தை பயன்படுத்தும் முறைகுறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதுஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளும்ஒரே நேரத்தில்தகவல்களை உள்ளீடு செய்ததால்இணையதளம் முடங்கியது.

 

 

தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர்வகுப்புமுகவரிரத்த வகை முதற்கொண்டு, 40க்கும்மேற்பட்ட தகவல்களைஎமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்துபிரத்யேக எண் பெறப்பட்டது.

 

 

நடப்பாண்டில்புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமேஎமிஸ் எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களை,புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்த போதுமற்றொரு அடையாள எண் உருவாகியுள்ளதுஇதில் எதைகல்வி ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியவில்லை.

 

 

 

சர்வர் முடங்கியிருப்பதால்வரும் 4ம் தேதிக்கு பின்தகவல்களை இணைக்கலாம் எனமட்டுமேகல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்இரட்டை பதிவு எண் குறித்துதெளிவான விளக்கம் அளிக்கவில்லை’ என்றனர்

பள்ளி மாணவர்களுக்கு “தொடுவானம்” திட்டம் 16ம் தேதி தொடக்கம்

அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித்திட்டத்துக்கு ‘தொடுவானம்

என்று பெயரிடப்பட்டுள்ளதுஇந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

 

 

 மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழக பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில்பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளதுஇவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் வேகமாகநடக்கிறதுமுதற்கட்டமாக 250 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

 

 

இவற்றின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதுஇந்த திட்டம் வரும் 16ம் தேதிதமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளதுஇதற்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில்வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசுபள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில்மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவதுஎன்பது குறித்த கையேட்டினை

ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.

 

 

 

 அடுத்த கல்வியாண்டு முதல்பாடங்கள் நடத்தும்போதுஇந்த கையேட்டின் அடிப்படையில்ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தவேண்டும்இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படிஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும்வரலாறுகணிதம்அறிவியல்ஆங்கிலம்தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.

 

இதுகுறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றனஇந்தபுதிய பாடத்திட்டத்தின் படி இனிஎப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்புதிய பாடத் திட்டங்களுக்குமாணவர்களை எவ்வாறு தயார் செய்வதுபுரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவதுபயிற்சிகளை எவ்வாறு அளிப்பதுஉள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள்அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்த ெதரிவித்தார்.

 

மேலும்ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும்பாடங்கள் வாரியாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம்நடத்தும் கையேடு தரப்படும்இதன் மூலம்அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களைமாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறதுஇந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும்ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.

 

பாடங்களை திட்டமிடல்வரைபடத்துடன் விளக்குதல்வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச்செய்யும் விதத்தில் கையேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்உதாரணமாகஇயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்திவிட்டுசெல்லாமல்அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம் நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்.அவ்வாறு செய்வது எப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.

 

 

2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்பு தயாராகிவிடும்அதன்பின்அனைத்து அரசுபள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவதுதங்களை எப்படி தயார் செய்துகொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும்அப்போது இந்த கையேடுகள்தரப்படும்இந்த கையோடுகள்கல்வித்துறையில் வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால்ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில்மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும்பல்வேறு நவீனபுத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.

வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம்

திருச்சி: ”வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய

பாடத்திட்டம் இருக்கும்,” எனகல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவதுதமிழ் கலாசாரம்பண்பாடு போன்றவற்றைவருங்காலமாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில்பாடங்கள் மாற்றி அமைக்கப்படும்எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய பாடத்திட்டம் இருக்கும்.

 

தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின்பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால்நவம்பர், 15ம் தேதி அதற்கான முன் வரைவுவெளியிடப்பட்டு, 15 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்பெற்றோர்கல்வியாளர்களிடம் கருத்துக்கள்கேட்கப்பட்டுஅதன் அடிப்படையில் அடுத்த ஆண்டுபுதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

 

மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிஅளிக்கப்படும்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும், ‘ஸ்மார்ட்‘ வகுப்புகள் துவங்கும் திட்டமும்அடுத்த மாதம் துவங்கி விடும்இவ்வாறு அவர் கூறினார்.

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇதனால்இந்தமையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லைகோவைநீலகிரிதிருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியபகுதியாகும்இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமேபல்கலையால்அங்கீகாரம் தர முடியும்அதேபோன்றுஇந்த எல்லையில் மட்டுமேதொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

 

ஆனால்பாரதியார் பல்கலை நிர்வாகம்சி.பி..பி., (Centre for Participatory and Online Programme), சி.சி..., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) எனபல்வேறு பெயர்களில், ‘எல்லை மீறி‘ தொலைதுார கல்வி மையங்களைபல ஆண்டுகளாக நடத்தி வருகிறதுஇதைத்தடுப்பதற்குதமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

 

380 கல்வி மையங்கள்

 

இதனால்வெளிமாநிலங்கள்வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க,பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளதுஇந்த மையங்களில்கலைஅறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றிமெடிக்கல்கவுன்சில்பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டுபட்டம் மற்றும்பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

 

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால்முறையாக வகுப்புகள்நடத்தப்படுவதில்லைவாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால்ஏராளமானமாணவர்கள் இதில் சேர்கின்றனர்இவர்களின் விடைத்தாள்களும்பெயரளவில் திருத்தப்பட்டுதேர்ச்சி தரப்பட்டுபாரதியார்பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

 

அதேநேரத்தில்அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில்பணத்தையும்பல ஆண்டுகளையும் செலவழித்துகஷ்டப்பட்டுபடித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லைஇதன் காரணமாககல்லுாரிகளை விடுத்து,இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதுதமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல்படிப்புகளுக்கான பட்டத்துக்குஎந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இதைக் கண்டித்துபல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால்தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல்கல்லுாரிகள் சங்கம் சார்பில்ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதுபாரதியார் பல்கலை பதிவாளர்பல்கலைமானியக்குழு செயலர்தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர்தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர்ஆகியோர்இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவருகிறதுஇந்நிலையில்பல்கலை மானியக் குழு சார்பில்அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக்சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம்பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும்பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும்என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனுபாரதியார் பல்கலை எந்தசட்டத்தையும்விதியையும்சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

 

பேராசிரியர் யஷ்பால்சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்தஉத்தரவின்படிமாநில பல்கலைக்கழகங்கள்தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்விமையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனுபல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

எல்லை மீறல்

 

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலைஅதன் எல்லைக்குட்பட்டகோவைநீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியதுமாவட்டங்களில் தொலைதுார கல்விமையங்களை நடத்தலாம்ஆனால்எல்லையைத் தாண்டிமையங்களை நடத்தி வருகிறது.

 

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள்தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவதுதொடர்பாகபல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்றுவிரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுஅதைபல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.

பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிபல்கலை வளாகத்திலும்அதன்எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் ‘கோர்ஸ்களை நடத்திபட்டங்களை வழங்கலாம்.

 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால்அதற்கு பல்கலை மானியக்குழுவிடம்முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்றுநாடு முழுவதும் உள்ள மாநிலபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘தங்களதுபல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில்இணைப்புக் கல்லுாரிகள்வளாக மையம்கல்வி மையம் போன்றவற்றைநடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

 

2016 மே 4 அன்றுஅனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவைஅமல்படுத்தும் வகையில்மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்மாநில எல்லையைத்தாண்டிபல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலபல்கலைக்கழகங்கள்தங்களது எல்லையைத் தாண்டிஇத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள்அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில்பல்கலைமானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பேஎந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

 

 

பட்டம் செல்லாது

 

ஆனால்பாரதியார் பல்கலைக்கழகம்பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும்அகில இந்திய தொழில் நுட்பகவுன்சில்இந்திய மெடிக்கல் கவுன்சில்இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்எதிலும் அனுமதி பெறாமலும்பட்டப்படிப்புபட்டயப்படிப்புஇளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை,சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

 

பல்கலையின் பெயர் மற்றும் ‘லோகோவுடன்இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால்பொது மக்கள்,மாணவர்கள்பெற்றோர்கள் எல்லோரும்இந்த மையங்களை நம்புகின்றனர்இந்த மையங்கள் அனைத்தும்சட்டத்துக்குவிரோதமாகவும்பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும்சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும்நடத்தப்படுவதால்இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம்சட்டப்படி செல்லாது.

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமானஎச்சரிக்கைகள்கடிதங்கள்இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல்இந்தமையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

 

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள்தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும்,பணத்தையும் இழந்துள்ளனர்எனவேபல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின்அடிப்படையில்உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறுஅந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலை மானியக்குழுவேபகிரங்கமாக இந்த மையங்களை ‘இல்லீகல்‘ என்று கூறியுள்ளதோடுஇந்த மையங்களில் தரப்படும்பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுஇதனால்இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கிவைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளதுஅத்துடன்சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலைநிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால்ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

 

 

எந்தஆண்டு முதல்?

 

கல்வியாளர்கள் கூறுகையில், ‘பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின்,பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது.இதுகுறித்துமானியக்குழுதான்மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்என்றனர்.

 

 

ஏன்எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

 

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள்வேலைக்குச்செல்வோர்உயர் கல்விக்கு விரும்பும் ஏழைமாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போதுஅவற்றை ஏன் மூட வேண்டும் என்றுபலரும் கேள்வி எழுப்புகின்றனர்இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதிகல்லுாரிகள் சங்கம்இதற்குக் கூறும் காரணங்கள்யோசிக்க வைப்பவை.

மாணவர்களிடம் ‘ரெகுலர் கோர்ஸ்‘ என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றனஆனால்இவை தொலைதுாரக் கல்வி என்பதுமட்டுமில்லாதுஇந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.

அரசாணைமுழு நேர ஆசிரியர்கள்ஆய்வுக்கூடம்நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.

கல்வி சார்ந்த அமைப்புகள்இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.

மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாதுபல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவானவருகை இருந்தால்ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.

மையங்களில் நடக்கும் தேர்வுமுறையாகக் கண்காணிக்கப்படாததால்நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஇதற்கானவிடைத்தாள் திருத்துவதும்மாலை 5:30 மணிக்குப் பின்முறையற்ற பணியாக நடக்கிறது.

கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும்இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரேமாதிரியான பட்டம் தரப்படுகிறதுஅதில்எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.

இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத ‘கோர்ஸ்களையும் இந்த ‘இல்லீகல்‘ மையங்களில் நடத்துகின்றனர்.

வகுப்புகள் நடத்தாமல்செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இந்த மையங்களால்பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறதுஅந்த அவப்பெயர்இதன் இணைப்புக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறதுஅவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

 

அனுமதி அளித்தோரே பொறுப்பு!

 

பிரின்ஸ் கஜேந்திரபாபுகல்வியாளர்பாரதியார் பல்கலையு.ஜி.சி., உத்தரவை மீறிஎல்லை தாண்டி தொலைதுார கல்விமையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பதுசட்டப்படி குற்றமாகும்கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால்,பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமேஇதன்மூலம் கிடைத்தகல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால்,இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களேபொறுப்பேற்க வேண்டும்பதவி உயர்வு காரணங்களுக்காகதொலைதுாரகல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போதுதன்னெழுச்சியாக மாணவர்கள்திரண்டு போராடுவது அவசியம்.

 

நிதியை நிறுத்த வேண்டும்!

 

பாலகுருசாமிஅண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்பாரதியார் பல்கலையின்அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த,தமிழக அரசாலும்யு.ஜி.சி.,யாலும் முடியும்பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டியயு.ஜி.சி.,மவுனம் சாதிக்கிறதுதமிழக அரசுக்குதுணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கமுழுஅதிகாரம் உண்டுசிண்டிகேட்கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றினால்துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாதுதொலைதுார கல்வி மையங்களால், ‘கரன்சி‘ கிடைப்பதால்தட்டி கேட்க வேண்டியவர்கள்வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்எதற்கெல்லாமோ போராடும்மாணவ சமுதாயம்தனக்கான கல்வி

வியாபாரமாவதற்கு எதிராகபோராட முன்வர வேண்டும்.

 

அப்பட்டமான சட்டவிரோதம்

 

.எம்.எம்.கலீல்தலைவர்தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்பல்கலை மானியக் குழுவேஇந்த மையங்கள்வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டதுஅதன் பின்னும்இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்தஅனுமதிப்பதில் துளியும் நியாயமில்லைஇது அப்பட்டமான சட்டவிரோதமாகும்மத்திய அரசுசுப்ரீம் கோர்ட் உத்தரவுகள்,பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறிசெல்லாத பட்டத்தைத் தருவதற்குஇந்த மையங்களை பல்கலைநிர்வாகமே நடத்தினால்அந்த பல்கலைக்கும்போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

 

இப்போதுபல்கலை மானியக்குழுவேஇதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்பல்கலைமானியக்குழுவின் முடிவுஎங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்பார்க்கலாம்.இவ்வழக்கில்நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

 

சுண்டல் வியாபாரமானது கல்வி!

 

 

பாடம்‘ நாராயணன்சமூக ஆர்வலர்பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில்மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்குஇதுபோன்ற காரணங்களால் தான்,அவப்பெயர் ஏற்பட்டதுசென்னை அண்ணா பல்கலையேபொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின்,திரும்ப பெற்றதுஏனெனில்தொலைதுார கல்வியில்தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறதுஇதில்வரும் லஞ்சத்தில்துணைவேந்தர்பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டுசுண்டல் வியாபாரம் போலகல்வியைகூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.