மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசுபள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில்மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவதுஎன்பது குறித்த கையேட்டினை

ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.

 

 

 

 அடுத்த கல்வியாண்டு முதல்பாடங்கள் நடத்தும்போதுஇந்த கையேட்டின் அடிப்படையில்ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தவேண்டும்இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படிஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும்வரலாறுகணிதம்அறிவியல்ஆங்கிலம்தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.

 

இதுகுறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றனஇந்தபுதிய பாடத்திட்டத்தின் படி இனிஎப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்புதிய பாடத் திட்டங்களுக்குமாணவர்களை எவ்வாறு தயார் செய்வதுபுரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவதுபயிற்சிகளை எவ்வாறு அளிப்பதுஉள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள்அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்த ெதரிவித்தார்.

 

மேலும்ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும்பாடங்கள் வாரியாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம்நடத்தும் கையேடு தரப்படும்இதன் மூலம்அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களைமாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறதுஇந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும்ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.

 

பாடங்களை திட்டமிடல்வரைபடத்துடன் விளக்குதல்வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச்செய்யும் விதத்தில் கையேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்உதாரணமாகஇயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்திவிட்டுசெல்லாமல்அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம் நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்.அவ்வாறு செய்வது எப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.

 

 

2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்பு தயாராகிவிடும்அதன்பின்அனைத்து அரசுபள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவதுதங்களை எப்படி தயார் செய்துகொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும்அப்போது இந்த கையேடுகள்தரப்படும்இந்த கையோடுகள்கல்வித்துறையில் வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால்ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில்மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும்பல்வேறு நவீனபுத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.

வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம்

திருச்சி: ”வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய

பாடத்திட்டம் இருக்கும்,” எனகல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவதுதமிழ் கலாசாரம்பண்பாடு போன்றவற்றைவருங்காலமாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில்பாடங்கள் மாற்றி அமைக்கப்படும்எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய பாடத்திட்டம் இருக்கும்.

 

தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின்பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால்நவம்பர், 15ம் தேதி அதற்கான முன் வரைவுவெளியிடப்பட்டு, 15 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்பெற்றோர்கல்வியாளர்களிடம் கருத்துக்கள்கேட்கப்பட்டுஅதன் அடிப்படையில் அடுத்த ஆண்டுபுதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

 

மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிஅளிக்கப்படும்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும், ‘ஸ்மார்ட்‘ வகுப்புகள் துவங்கும் திட்டமும்அடுத்த மாதம் துவங்கி விடும்இவ்வாறு அவர் கூறினார்.

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇதனால்இந்தமையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லைகோவைநீலகிரிதிருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியபகுதியாகும்இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமேபல்கலையால்அங்கீகாரம் தர முடியும்அதேபோன்றுஇந்த எல்லையில் மட்டுமேதொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

 

ஆனால்பாரதியார் பல்கலை நிர்வாகம்சி.பி..பி., (Centre for Participatory and Online Programme), சி.சி..., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) எனபல்வேறு பெயர்களில், ‘எல்லை மீறி‘ தொலைதுார கல்வி மையங்களைபல ஆண்டுகளாக நடத்தி வருகிறதுஇதைத்தடுப்பதற்குதமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

 

380 கல்வி மையங்கள்

 

இதனால்வெளிமாநிலங்கள்வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க,பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளதுஇந்த மையங்களில்கலைஅறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றிமெடிக்கல்கவுன்சில்பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டுபட்டம் மற்றும்பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

 

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால்முறையாக வகுப்புகள்நடத்தப்படுவதில்லைவாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால்ஏராளமானமாணவர்கள் இதில் சேர்கின்றனர்இவர்களின் விடைத்தாள்களும்பெயரளவில் திருத்தப்பட்டுதேர்ச்சி தரப்பட்டுபாரதியார்பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

 

அதேநேரத்தில்அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில்பணத்தையும்பல ஆண்டுகளையும் செலவழித்துகஷ்டப்பட்டுபடித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லைஇதன் காரணமாககல்லுாரிகளை விடுத்து,இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதுதமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல்படிப்புகளுக்கான பட்டத்துக்குஎந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இதைக் கண்டித்துபல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால்தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல்கல்லுாரிகள் சங்கம் சார்பில்ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதுபாரதியார் பல்கலை பதிவாளர்பல்கலைமானியக்குழு செயலர்தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர்தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர்ஆகியோர்இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவருகிறதுஇந்நிலையில்பல்கலை மானியக் குழு சார்பில்அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக்சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம்பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும்பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும்என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனுபாரதியார் பல்கலை எந்தசட்டத்தையும்விதியையும்சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

 

பேராசிரியர் யஷ்பால்சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்தஉத்தரவின்படிமாநில பல்கலைக்கழகங்கள்தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்விமையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனுபல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

எல்லை மீறல்

 

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலைஅதன் எல்லைக்குட்பட்டகோவைநீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியதுமாவட்டங்களில் தொலைதுார கல்விமையங்களை நடத்தலாம்ஆனால்எல்லையைத் தாண்டிமையங்களை நடத்தி வருகிறது.

 

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள்தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவதுதொடர்பாகபல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்றுவிரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுஅதைபல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.

பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிபல்கலை வளாகத்திலும்அதன்எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் ‘கோர்ஸ்களை நடத்திபட்டங்களை வழங்கலாம்.

 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால்அதற்கு பல்கலை மானியக்குழுவிடம்முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்றுநாடு முழுவதும் உள்ள மாநிலபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘தங்களதுபல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில்இணைப்புக் கல்லுாரிகள்வளாக மையம்கல்வி மையம் போன்றவற்றைநடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

 

2016 மே 4 அன்றுஅனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவைஅமல்படுத்தும் வகையில்மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்மாநில எல்லையைத்தாண்டிபல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலபல்கலைக்கழகங்கள்தங்களது எல்லையைத் தாண்டிஇத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள்அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில்பல்கலைமானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பேஎந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

 

 

பட்டம் செல்லாது

 

ஆனால்பாரதியார் பல்கலைக்கழகம்பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும்அகில இந்திய தொழில் நுட்பகவுன்சில்இந்திய மெடிக்கல் கவுன்சில்இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்எதிலும் அனுமதி பெறாமலும்பட்டப்படிப்புபட்டயப்படிப்புஇளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை,சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

 

பல்கலையின் பெயர் மற்றும் ‘லோகோவுடன்இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால்பொது மக்கள்,மாணவர்கள்பெற்றோர்கள் எல்லோரும்இந்த மையங்களை நம்புகின்றனர்இந்த மையங்கள் அனைத்தும்சட்டத்துக்குவிரோதமாகவும்பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும்சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும்நடத்தப்படுவதால்இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம்சட்டப்படி செல்லாது.

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமானஎச்சரிக்கைகள்கடிதங்கள்இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல்இந்தமையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

 

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள்தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும்,பணத்தையும் இழந்துள்ளனர்எனவேபல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின்அடிப்படையில்உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறுஅந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலை மானியக்குழுவேபகிரங்கமாக இந்த மையங்களை ‘இல்லீகல்‘ என்று கூறியுள்ளதோடுஇந்த மையங்களில் தரப்படும்பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுஇதனால்இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கிவைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளதுஅத்துடன்சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலைநிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால்ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

 

 

எந்தஆண்டு முதல்?

 

கல்வியாளர்கள் கூறுகையில், ‘பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின்,பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது.இதுகுறித்துமானியக்குழுதான்மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்என்றனர்.

 

 

ஏன்எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

 

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள்வேலைக்குச்செல்வோர்உயர் கல்விக்கு விரும்பும் ஏழைமாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போதுஅவற்றை ஏன் மூட வேண்டும் என்றுபலரும் கேள்வி எழுப்புகின்றனர்இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதிகல்லுாரிகள் சங்கம்இதற்குக் கூறும் காரணங்கள்யோசிக்க வைப்பவை.

மாணவர்களிடம் ‘ரெகுலர் கோர்ஸ்‘ என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றனஆனால்இவை தொலைதுாரக் கல்வி என்பதுமட்டுமில்லாதுஇந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.

அரசாணைமுழு நேர ஆசிரியர்கள்ஆய்வுக்கூடம்நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.

கல்வி சார்ந்த அமைப்புகள்இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.

மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாதுபல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவானவருகை இருந்தால்ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.

மையங்களில் நடக்கும் தேர்வுமுறையாகக் கண்காணிக்கப்படாததால்நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஇதற்கானவிடைத்தாள் திருத்துவதும்மாலை 5:30 மணிக்குப் பின்முறையற்ற பணியாக நடக்கிறது.

கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும்இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரேமாதிரியான பட்டம் தரப்படுகிறதுஅதில்எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.

இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத ‘கோர்ஸ்களையும் இந்த ‘இல்லீகல்‘ மையங்களில் நடத்துகின்றனர்.

வகுப்புகள் நடத்தாமல்செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இந்த மையங்களால்பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறதுஅந்த அவப்பெயர்இதன் இணைப்புக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறதுஅவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

 

அனுமதி அளித்தோரே பொறுப்பு!

 

பிரின்ஸ் கஜேந்திரபாபுகல்வியாளர்பாரதியார் பல்கலையு.ஜி.சி., உத்தரவை மீறிஎல்லை தாண்டி தொலைதுார கல்விமையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பதுசட்டப்படி குற்றமாகும்கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால்,பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமேஇதன்மூலம் கிடைத்தகல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால்,இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களேபொறுப்பேற்க வேண்டும்பதவி உயர்வு காரணங்களுக்காகதொலைதுாரகல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போதுதன்னெழுச்சியாக மாணவர்கள்திரண்டு போராடுவது அவசியம்.

 

நிதியை நிறுத்த வேண்டும்!

 

பாலகுருசாமிஅண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்பாரதியார் பல்கலையின்அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த,தமிழக அரசாலும்யு.ஜி.சி.,யாலும் முடியும்பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டியயு.ஜி.சி.,மவுனம் சாதிக்கிறதுதமிழக அரசுக்குதுணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கமுழுஅதிகாரம் உண்டுசிண்டிகேட்கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றினால்துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாதுதொலைதுார கல்வி மையங்களால், ‘கரன்சி‘ கிடைப்பதால்தட்டி கேட்க வேண்டியவர்கள்வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்எதற்கெல்லாமோ போராடும்மாணவ சமுதாயம்தனக்கான கல்வி

வியாபாரமாவதற்கு எதிராகபோராட முன்வர வேண்டும்.

 

அப்பட்டமான சட்டவிரோதம்

 

.எம்.எம்.கலீல்தலைவர்தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்பல்கலை மானியக் குழுவேஇந்த மையங்கள்வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டதுஅதன் பின்னும்இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்தஅனுமதிப்பதில் துளியும் நியாயமில்லைஇது அப்பட்டமான சட்டவிரோதமாகும்மத்திய அரசுசுப்ரீம் கோர்ட் உத்தரவுகள்,பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறிசெல்லாத பட்டத்தைத் தருவதற்குஇந்த மையங்களை பல்கலைநிர்வாகமே நடத்தினால்அந்த பல்கலைக்கும்போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

 

இப்போதுபல்கலை மானியக்குழுவேஇதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்பல்கலைமானியக்குழுவின் முடிவுஎங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்பார்க்கலாம்.இவ்வழக்கில்நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

 

சுண்டல் வியாபாரமானது கல்வி!

 

 

பாடம்‘ நாராயணன்சமூக ஆர்வலர்பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில்மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்குஇதுபோன்ற காரணங்களால் தான்,அவப்பெயர் ஏற்பட்டதுசென்னை அண்ணா பல்கலையேபொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின்,திரும்ப பெற்றதுஏனெனில்தொலைதுார கல்வியில்தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறதுஇதில்வரும் லஞ்சத்தில்துணைவேந்தர்பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டுசுண்டல் வியாபாரம் போலகல்வியைகூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்!
நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ — மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.
தேவை அதிகரிப்பு

நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,

பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

மேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, ‘நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்’ என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், ‘நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

‘தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1,

பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்’ என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நவ., 20க்குள்:

மேலும், ‘மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்’ என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும்
ஆலோசனை நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும் !!

  1. Anthropology – மானுடவியல்/ மானிடவியல்

    2. Archaeology – தொல்பொருளியல்

    3. Astrology – சோதிடவியல் (சோதிடம்)

    4. Astrology – வான்குறியியல்

    5. Bacteriology பற்றுயிரியல்

    6. Biology – உயிரியல்

    7. Biotechnology – உயிரித்தொழில்நுட்பவியல்

    6. Climatology – காலநிலையியல்

    7. Cosmology – பிரபஞ்சவியல்

    8. Criminology – குற்றவியல்

    9. Cytology – உயிரணுவியல்/ குழியவியல்

    10. Dendrology – மரவியல்

    11. Desmology – என்பிழையவியல்

    12. Dermatology – தோலியல்

    13. Ecology – உயிர்ச்சூழலியல்

    14. Embryology – முளையவியல்

    15. Entomology – பூச்சியியல்

    16. Epistemology – அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

    17. Eschatology – இறுதியியல்

    18. Ethnology – இனவியல்

    19. Ethology – விலங்கு நடத்தையியல்

    20. Etiology/ aetiology – நோயேதியல்

    21. Etymology – சொற்பிறப்பியல்

    22. Futurology – எதிர்காலவியல்

    23. Geochronology – புவிக்காலவியல்

    24. Glaciology – பனியாற்றியியல்/ பனியியல்

    25. Geology – புவியமைப்பியல்/ நிலவியல்

    26. Geomorphology – புவிப்புறவுருவியல்

    27. Graphology – கையெழுத்தியல்

    28. Genealogy – குடிமரபியல்

    29. Gynaecology – பெண்ணோயியல்

    30. Haematology – குருதியியல்

    31. Herpetology – ஊர்வனவியல்

    32. Hippology – பரியியல்

    33. Histrology – இழையவியல்

    34. Hydrology – நீரியல்

    35. Ichthyology – மீனியியல்

    36. Ideology – கருத்தியல்

    37. Information Technology – தகவல் தொழில்நுட்பவியல்

    38. Lexicology – சொல்லியல்

    39. Linguistic typology – மொழியியற் குறியீட்டியல்

    40. Lithology – பாறையுருவியல்

    41. Mammology – பாலூட்டியல்

    42. Meteorology – வளிமண்டலவியல்

    43. Metrology – அளவியல்

    44. Microbiology – நுண்ணுயிரியல்

    45. Minerology – கனிமவியல்

    46. Morphology – உருவியல்

    47. Mycology – காளாம்பியியல்

    48. Mineralogy – தாதியியல்

    49. Myrmecology – எறும்பியல்

    50. Mythology – தொன்மவியல்

    51. Nephrology – முகிலியல்

    52. Neurology – நரம்பியல்

    53. Odontology – பல்லியல்

    54. Ontology – உளமையியல்

    55. Ophthalmology – விழியியல்

    56. Ornithology – பறவையியல்

    57. Osteology – என்பியல்

    58. Otology – செவியியல்

    59. Pathology – நொயியல்

    60. Pedology – மண்ணியல்

    61. Petrology – பாறையியல்

    62. Pharmacology – மருந்தியக்கவியல்

    63. Penology – தண்டனைவியல்

    64. Personality Psychology – ஆளுமை உளவியல்

    65. Philology – மொழிவரலாற்றியல்

    66. Phonology – ஒலியியல்

    67. Psychology – உளவியல்

    68. Physiology – உடற்றொழியியல்

    69. Radiology – கதிரியல்

    70. Seismology – பூகம்பவியல்

    71. Semiology – குறியீட்டியல்

    72. Sociology – சமூகவியல்

    73. Speleology – குகையியல்

    74. Sciencology – விஞ்ஞானவியல் (அறிவியல்)

    75. Technology – தொழில்நுட்பவியல்

    76. Thanatology – இறப்பியல்

    77. Theology – இறையியல்

    78. Toxicology – நஞ்சியல்

    79. Virology – நச்சுநுண்மவியல்

    80. Volcanology – எரிமலையியல்

    81. Zoology – விலங்கியல்

விஜயதசமி ‘அட்மிஷன் ஜோர்’ கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.

தரமான தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வழங்கப்படாததால் திறமை குறைவு காரணமாக பட்டப்படிப்பு படித்தும் நிறைய பேர் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தரமான கல்வியை வழங்காதது என்பது மாணவர்களின் வளர்ச்சியை தடைபடுத்துகிறது. தரமற்ற கல்வி என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

இவ்வாறு உலக வங்கியின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து நல்ல புரிதலோடு மாணவர்களை உருவாக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கியின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தியாவின் கல்வித்தரம் இந்த அளவில்தான் உள்ளது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இனியாவது பள்ளி கல்வி தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்..

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள்.
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

பிளஸ் 2வில் 600 ‘மார்க்’ கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள். – தினமலர்.

 

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், ‘பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது’ என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.