- *பசிஎன்றுகுழந்தைசொன்னால், உடனே உணவு கொடுங்கள்.*அரட்டையிலோ,சோம்பலிலோ, வேறுவேலையிலோ குழந்தையின்
குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோகுழந்தைகள்உங்களுக்கு குழந்தையாய்தெரியலாம். *எல்லோருக்கும்அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள*்.
- ஒருபோதும்“ச்சீ வாயை மூடு“, “தொணதொணன்னுகேள்விகேட்காதே“ என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, *அவர்களின்ஆர்வத்தை குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்!*
- பள்ளிக்குஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ,பிறகுழந்தைகளுடனோஅனுப்பினால், அந்த *வாகன ஓட்டுனரின்முழு விவரமும்தெரிந்து கொள்ளுங்கள், அவர்வீட்டு முகவரிஉட்பட.*
- வாகனஓட்டுனரின் *நடத்தையிலும், பழக்கவழக்கத்திலும்ஐயமின்றிதெளிவுறுங்கள்!*
- பெரும்பாலானவாகன ஓட்டுனர்கள், *மூட்டைகளைபோல்குழந்தைகளை அடைத்து,மரியாதையின்றி பேசுவதும், தொடக்கூடாத இடங்களைதொடுவதும் சில இடங்களில் நடக்கிறது.*
- யார்அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்கவேண்டும் என்று *குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள்.*
- *குழந்தைகள்,வீட்டின்முகவரி,பெற்றோரின் தொலைபேசிஎண்கள் அறிந்திருத்தல் நலம்*.
- வீட்டில்ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், *ஒருபோதும் ஒருவருடன்மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயதுவித்தியாசம் எப்படிஇருந்தாலும்!*
- ஒருகட்டத்திற்கு மேல், *உங்கள்விருப்பங்களைகுழந்தையின்மேல் திணிக்காதீர்கள்.*
- வீட்டில்குழந்தைகள் இருக்கும்போது *வன்முறை, காதல்,கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திரைக்காட்சிக ளையோ,நிகழ்ச்சிகளையோபார்க்காதீர்கள்!*
- பெரியவர்கள்,பெண்கள் எப்போதும் சீரியல்களில்மூழ்கிஇருக்காமல், *குழந்தைகளுக்குபிடித்தாற்போலோ,அல்லதுஅவர்களுக்கு பொது அறிவு பெருகும்வகையிலானநிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.*
- குழந்தைகளிடம்தினமும் நேரம்செலவிடுங்கள். *ஒருதோழமையுடன் அவர்கள்சொல்வதை காது கொடுத்துகேளுங்கள்.*
- *தவறுகளைதன்மையுடன்திருத்துங்கள்.*தண்டிக்கநினைக்காதீர்கள்!
- ஒருமுறைநீர் ஊற்றியவுடன்,விதை மரமாகிவிடாது. *நீங்கள்ஒருமுறை சொன்னவுடன்குழந்தைகள் உங்கள் விருப்பப்படிமாறிவிட மாட்டார்கள்.உங்களுக்கு பொறுமைஅவசியம்.*
- பள்ளிவிட்டு வரும் குழந்தைகளை அன்புடன்அரவணைத்து,வேண்டியது செய்ய *அம்மாவோ,பெரியவர்களோ வீட்டில்இருத்தல்வேண்டும்!*
- *குழந்தைகளின்எதிரில்புறம் பேசாதீர்கள்.* பின்னாளில்அவர்கள்உங்களைப் பற்றி பேசலாம்.
- உங்கள்பெற்றோரை நடத்தும்விதம், *உங்கள் பிள்ளைகளால்கவனிக்கப்படுகிறது.* நாளை உங்களுக்கும் அதுவே நடக்கலாம்!
- படிப்புஎன்பது அடிப்படை. அதையும் தாண்டி*குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.*
- *ஓடிஆடிவிளையாடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குஅவசியம்.* விளையாட்டிற்குதடை போடாதீர்கள். “All work and noplay makes Jack a dull boy”.
- குழந்தைகள்கேள்வி கேட்கட்டும். *அவர்களின் வயதுக்கேற்பபுரியும்படி பதில ்சொல்லுங்கள்!* பொது அறிவு கேள்விகள்கேட்கப்படும்போது *தெரிந்தால் சொல்லுங்கள்,தெரியாவிட்டால்பிறகு சொல்கிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடிகேள்விக்கான பதிலை அறிந்துகொண்டு, மறக்காமல்அவர்களிடம்சொல்வது அவசியம்.*
- குழந்தைகளைதனியே கடைக்கு அனுப்பும் போது கவனம்தேவை. *நெடு நேரம் குழந்தை நிற்கவைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோவழங்கப்பட்டாலோ கவனம் தேவை.*
- ஆணோ,பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், *”Good touch, “Bad touch” எதுஎன்பதை பெற்றோர்கள்சொல்லிக் கொடுங்கள்.*
- ஒருபோதும், உங்கள் குழந்தைகளின் எதிரே *சண்டைஇடாதீர்கள்!*
- ஒவ்வொருகுழந்தையும் இறைவனின்வரம். அவர்கள், *ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள்அல்ல!*