ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நீட்’ தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர,நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்டம்’ எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு

பிளஸ்தேர்வு மார்ச் 2ம் தேதியும்பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச்8ம் தேதியும் தொடங்க உள்ளனபள்ளிகள்மூலம் சுமார் 20 லட்சம் மாணவ,

மாணவியர்மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர்பிளஸ்வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளைஎடுத்துபடிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுதவேண்டும்வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாகசெய்முறைத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்துஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதுசெய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்தவாரம் சென்னையில் நடக்கஉள்ளதுஇதில்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொள்வார்கள்பிளஸ்வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும்பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் மாலையிலும் நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

 

அறிவியல்பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள்குழுக்களாகபிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒருகுழு வீதம் செய்முறைத் தேர்வுக்குஅனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்புமாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம்முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள்முடிக்கதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு செய்முறைத்தேர்வுக்கானஅட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்

மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க “நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வு

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:

 

மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எம்.பி.பி.எஸ். முடித்து வெளியேறும் மருத்துவர்களுக்கு “நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று “நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

 

அதனடிப்படையில், புதிய மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இந்த மசோதாவை, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக சுகாதாரத் துறை அமைச்சகம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 6-ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

இதுதவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது என்றார் அவர்.

ரேஷன் கார்டுகளில் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட உத்தரவு.

ரேஷன் கார்டுகளில், ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளதாவது:
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், ‘2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்’ என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் உதவி மையங்கள் 2 மாதங்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு.

பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் வகையில், அதற்கான உதவி மையங்கள் பிப்ரவரி மாத இறுதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் இதுவரை 8.5 லட்சம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதார் பதிவுக்கென கட்டணம் ஏதுமில்லை.

உதவி மையங்கள்:

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து, அட்டைகிடைக்கப்பெறாதவர்கள், அட்டையைத் தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.இதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது, தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில்ஆதார் உதவி மையங்களை அமைந்துள்ளது. இந்த மையங்கள் புதன்கிழமை (டிச.28) முதல் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை செயல்படும்.ஆதார் எண்ணுக்கு ஏற்கெனவே பதிவுகளைச் செய்துவிட்டு, ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

பிளாஸ்டிக் அட்டை:

ஆதார் எண்ணை, ஆதார் உதவி மையங்களின்அருகிலேயே இயங்கும் அரசு இணைய சேவை மையங்களில் காண்பிக்கலாம். விரல்ரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை அல்லது ரூ.10 கட்டணத்தில் காகிதத்தில் அச்சிட்டோ அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள்

IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

 

 

F.A.Q

IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

குறைந்தபட்ச வயது :

21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது :

பொதுப்பிரிவினர் (GENERAL) : 32

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

 

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு

ஆளுமை அதிகாரம்

பெருமதிப்பிற்குரிய பணி

சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை

மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.

ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.

என்னால் முடியுமா ?

கண்டிப்பாக முடியும்.

இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.

ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன், தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?

தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.

IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.

அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

 

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

 

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.

அது ஓர் போட்டித் தேர்வு.

ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

முற்றிலும் தவறான கருத்து

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

இல்லை.

அப்படி எதுவும் இல்லை..

நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.

அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்

வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்

சரியான திட்டமிடல்

திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்

மாதிரித் தேர்வுகள் எழுதுதல்

சரியான வழிகாட்டல்

இறுதியாக முழு நம்பிக்கையோடு இருத்தல்

இவை அனைத்தும் இருந்தால் , IAS  ஆவது  உறுதி …

உணவு பொருள் வழங்க செய்தித்தாள் பயன்படுத்தினால்…நடவடிக்கை பாயும்! விழிப்போடு இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் “அட்வைஸ்!!!

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், செய்தித்தாளில் வைத்து உணவு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; அவ்வாறு உணவு பண்டங்கள் வைத்து தருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

செய்தித்தாள் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில், உணவு பண்டங்களை கட்டுதல், மடித்தல் மற்றும் காகிதத்தின் மீது வைத்து கொடுப்பது, உணவின் பாதுகாப்பு தன்மைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவை தயார் செய்திருந்தாலும், உணவு பண்டத்தை அச்சு காகிதத்தில் மடித்து கொடுப்பதால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகளில், பெரும்பாலும் இத்தகைய காகிதங்களிலேயே, உணவு பண்டங்களை மடித்து கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நச்சுத்தன்மை கலந்து விடுகிறது.

இது குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிக்கை:

செய்தித்தாள் உட்பட, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள, “இங்க்’ பல வேதி பொருட்களால் ஆனது என்பதால், அதை உபயோகிக்கும் உணவு பண்டத்தால், உடல் நலத்துக்கு மறைமுகமாக கேடு ஏற்படுகிறது. காகிதங்களில், எழுத்து அச்சில் உபயோகிக்கும் “இங்க்’, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் கலர் மற்றும் ரசாயன பொருட்களின் கலவை என்பதால், உடல் நலம் பாதிக்கப்படும்.

அச்சு காகிதங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை, மறுசுழற்சி முறையில் மீண்டும் பேப்பராக தயாரித்து வரும் போது, ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள், மினரல் ஆயில் போன்றவை உள்ளடங்கி இருக்கும் என்பதால், அஜீரண கோளாறும், கடும் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறியவர் முதல், பெரியவர்கள் வரை, காகிதங்களில் வைத்த உணவு பண்டங்களை சாப்பிடும் போது, எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, பக்கோடா, பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை, செய்தித்தாளில் சுற்றி கொடுக்கும் போது, எண்ணெய் உறிஞ்சுகிறது. இதனால், அச்சு காகிதத்தில் உள்ள “இங்க்’ , எளிதாக உணவு பொருட்களில் ஒட்டிக் கொள்கிறது. சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகள், கேண்டீன்களில், அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உணவு பண்டங்களை வழங்கக்கூடாது.

செய்தித்தாள் உள்பட, காகிதங்களின் மூலம் உணவு பண்டங்களை “பேக்’ செய்து கொடுப்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளின் படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் இருப்பின், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

எழுதுங்கள் ஜே.இ.இ.,!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்
பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.

பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரு நிலைகள்
ஜே.இ.இ., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே.இ.இ., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தேர்வு முறை

தாள் 1: இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்.,
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்
கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

குறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 2, 2017