இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள்

IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

 

 

F.A.Q

IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

குறைந்தபட்ச வயது :

21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது :

பொதுப்பிரிவினர் (GENERAL) : 32

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

 

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு

ஆளுமை அதிகாரம்

பெருமதிப்பிற்குரிய பணி

சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை

மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.

ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.

என்னால் முடியுமா ?

கண்டிப்பாக முடியும்.

இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.

ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன், தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?

தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.

IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.

அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

 

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

 

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.

அது ஓர் போட்டித் தேர்வு.

ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

முற்றிலும் தவறான கருத்து

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

இல்லை.

அப்படி எதுவும் இல்லை..

நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.

அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்

வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்

சரியான திட்டமிடல்

திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்

மாதிரித் தேர்வுகள் எழுதுதல்

சரியான வழிகாட்டல்

இறுதியாக முழு நம்பிக்கையோடு இருத்தல்

இவை அனைத்தும் இருந்தால் , IAS  ஆவது  உறுதி …

உணவு பொருள் வழங்க செய்தித்தாள் பயன்படுத்தினால்…நடவடிக்கை பாயும்! விழிப்போடு இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் “அட்வைஸ்!!!

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், செய்தித்தாளில் வைத்து உணவு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; அவ்வாறு உணவு பண்டங்கள் வைத்து தருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

செய்தித்தாள் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில், உணவு பண்டங்களை கட்டுதல், மடித்தல் மற்றும் காகிதத்தின் மீது வைத்து கொடுப்பது, உணவின் பாதுகாப்பு தன்மைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவை தயார் செய்திருந்தாலும், உணவு பண்டத்தை அச்சு காகிதத்தில் மடித்து கொடுப்பதால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகளில், பெரும்பாலும் இத்தகைய காகிதங்களிலேயே, உணவு பண்டங்களை மடித்து கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நச்சுத்தன்மை கலந்து விடுகிறது.

இது குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிக்கை:

செய்தித்தாள் உட்பட, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள, “இங்க்’ பல வேதி பொருட்களால் ஆனது என்பதால், அதை உபயோகிக்கும் உணவு பண்டத்தால், உடல் நலத்துக்கு மறைமுகமாக கேடு ஏற்படுகிறது. காகிதங்களில், எழுத்து அச்சில் உபயோகிக்கும் “இங்க்’, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் கலர் மற்றும் ரசாயன பொருட்களின் கலவை என்பதால், உடல் நலம் பாதிக்கப்படும்.

அச்சு காகிதங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை, மறுசுழற்சி முறையில் மீண்டும் பேப்பராக தயாரித்து வரும் போது, ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள், மினரல் ஆயில் போன்றவை உள்ளடங்கி இருக்கும் என்பதால், அஜீரண கோளாறும், கடும் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறியவர் முதல், பெரியவர்கள் வரை, காகிதங்களில் வைத்த உணவு பண்டங்களை சாப்பிடும் போது, எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, பக்கோடா, பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை, செய்தித்தாளில் சுற்றி கொடுக்கும் போது, எண்ணெய் உறிஞ்சுகிறது. இதனால், அச்சு காகிதத்தில் உள்ள “இங்க்’ , எளிதாக உணவு பொருட்களில் ஒட்டிக் கொள்கிறது. சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகள், கேண்டீன்களில், அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உணவு பண்டங்களை வழங்கக்கூடாது.

செய்தித்தாள் உள்பட, காகிதங்களின் மூலம் உணவு பண்டங்களை “பேக்’ செய்து கொடுப்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளின் படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் இருப்பின், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

எழுதுங்கள் ஜே.இ.இ.,!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்
பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.

பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரு நிலைகள்
ஜே.இ.இ., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே.இ.இ., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தேர்வு முறை

தாள் 1: இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்.,
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்
கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

குறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 2, 2017

வேறு பள்ளிக்குப் போகச் சொன்னால் நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ’ஸ்லோ லேனர்ஸ்’ எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பொதுதேர்வு எழுத அனுமதிக்காமல், அவர்களை வேறு பள்ளிக்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தி வருகின்றன பல பள்ளிகள். இந்நிலையில், கல்வித்

தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, இக்கல்வி ஆண்டு வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு.

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், ‘நெட்’ என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.
ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.

இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

குழந்தை வளர்ப்பு-சில டிப்ஸ்…

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்…!

 

  1. பசி என்று குழந்தை
    சொன்னால், உடனே உணவு கொடுங்கள். அரட்டையிலோ,
    சோம்பலிலோ, வேறு
    வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள்
உங்களுக்கு குழந்தையாய்
தெரியலாம். எல்லோருக்கும்
அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்.

  1. ஒருபோதும் “ச்சீ வாயை மூடு”, “தொணதொணன்னு
    கேள்வி கேட்காதே” என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,
    அவர்களின் ஆர்வத்தை குழி
    தோண்டி புதைத்து விடாதீர்கள்!
  2. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற
    குழந்தைகளுடனோ
    அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும்
    தெரிந்து கொள்ளுங்கள், அவர்
    வீட்டு முகவரி உட்பட.
  3. வாகன ஓட்டுனரின்
    நடத்தையிலும், பழக்க
    வழக்கத்திலும் ஐயமின்றி
    தெளிவுறுங்கள்!
  4. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல்
    குழந்தைகளை அடைத்து,
    மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை
    தொடுவதும் சில இடங்களில் நடக்கிறது.
  5. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு
    தெளிவுபடுத்துங்கள்.
  6. குழந்தைகள், வீட்டின் முகவரி,
    பெற்றோரின் தொலைபேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
  7. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன்
    மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி
    இருந்தாலும்!
  8. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்
    விருப்பங்களை குழந்தையின்
    மேல் திணிக்காதீர்கள்.
  9. வீட்டில் குழந்தைகள் இருக்கும்
    போது வன்முறை, காதல், கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திரைக்காட்சிக ளையோ, நிகழ்ச்சிகளையோ
    பார்க்காதீர்கள்!
  10. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி
    இருக்காமல், குழந்தைகளுக்கு
    பிடித்தாற்போலோ, அல்லது
    அவர்களுக்கு பொது அறிவு பெருகும் வகையிலான
    நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
  11. குழந்தைகளிடம் தினமும் நேரம்
    செலவிடுங்கள். ஒரு
    தோழமையுடன் அவர்கள்
    சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
  12. தவறுகளை தன்மையுடன்
    திருத்துங்கள். தண்டிக்க
    நினைக்காதீர்கள்!
  13. ஒருமுறை நீர் ஊற்றியவுடன்,
    விதை மரமாகிவிடாது. நீங்கள் ஒருமுறை சொன்னவுடன்
    குழந்தைகள் உங்கள் விருப்பப்படி மாறிவிட மாட்டார்கள்.
    உங்களுக்கு பொறுமை
    அவசியம்.
  14. பள்ளி விட்டு வரும்
    குழந்தைகளை அன்புடன்
    அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ,
    பெரியவர்களோ வீட்டில் இருத்தல்
    வேண்டும்!
  15. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள்
    உங்களைப் பற்றி பேசலாம்.
  16. உங்கள் பெற்றோரை நடத்தும்
    விதம், உங்கள் பிள்ளைகளால்
    கவனிக்கப்படுகிறது. நாளை உங்களுக்கும் அதுவே நடக்கலாம்!
  17. படிப்பு என்பது அடிப்படை. அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற
    ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
  18. ஓடி ஆடி விளையாடுவது
    குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு
    அவசியம். விளையாட்டிற்கு
    தடை போடாதீர்கள். “All work and no
    play makes Jack a dull boy”.
  19. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும். அவர்களின்
    வயதுக்கேற்ப புரியும்படி பதில்
    சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்போது
    தெரிந்தால் சொல்லுங்கள்,
    தெரியாவிட்டால் பிறகு
    சொல்கிறேன் என்று
    சொல்லுங்கள். சொன்னபடி
    கேள்விக்கான பதிலை அறிந்துகொண்டு, மறக்காமல் அவர்களிடம்
    சொல்வது அவசியம்.
  20. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள்
    மிகுதியாகவோ,
    இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ
    கவனம் தேவை.
  21. ஆணோ, பெண்ணோ, எந்த
    குழந்தையாய் இருந்தாலும்,
    “Good touch”, “Bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
  22. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
  23. ஒவ்வொரு குழந்தையும் இறைவனின்
    வரம். அவர்கள், ஒருபோதும் உங்கள்
    கோபதாபங்களின் வடிகால்கள்
    அல்ல!

உங்கள் வீட்டில் உள்ள வருக்கும் படித்துக் காட்டுங்கள்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களை தேர்ந்தெடுக்க முடியாது

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.

எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.

புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.

இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.

சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.