பாடத்திட்டத்தை மாற்றுங்கள் – தினத்தந்தி தலையங்கம் !!

முன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது.
 ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை
குறையத்தொடங்கியுள்ளது.

 இந்த நிலையில், 2005-2006-ல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விதவிதமான பாடத்திட்டம் என்றில்லாமல், ஒரே கல்விமுறை இருக்கவேண்டும் என்றநோக்கத்தில், “சமச்சீர் கல்விமுறை” கொண்டுவரப்பட்டது. மற்ற கல்வித்திட்டங்களின் கல்வித்தரம் உயர்ந்துகொண்டே சென்றபோது, தமிழ்நாட்டில் மாறிவரும் காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வகையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவுடன் கைநிறைய சம்பளம் உடனடியாக கிடைக்கும் வகையில், வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருந்த நிலையில், அலைஅலையாய் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்கள்.

 இப்போது பிளஸ்-2 படித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையைப்போல’ மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுவிட்டு, நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், இந்த மார்க்குகளின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை தந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 50 சதவீதம்பேர் முதல் ஆண்டில் தங்கள் ‘செமஸ்டர்’ தேர்வில் பல பாடங்களில் தோற்றுவிடுகிறார்கள். இவ்வாறு தோல்வியடையும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள்.

 இதுபோல, என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்களில் பெரிய வேலைக்கு செல்பவர்களில் ஏராளமானோர் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, அந்த பாடத்திட்டத்தின்கீழ் படிக்க முடியாமல், ஏராளமானோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
  இதற்கெல்லாம் காரணம், பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறையால் மாற்றப்படாமல் இருப்பதுதான். வருகிற ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை அகில இந்திய அளவிலான ‘நீட்’ தேர்வு மூலம்தான் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நிச்சயமாக ‘நீட்’ தேர்வை எழுதி வெற்றி பெறவே முடியாது.

 தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக இல்லாமல், பிற மாநிலத்தவர் வந்து சேரப்போகும் அபாயநிலை கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, உடனடியாக பிளஸ்-2 பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர்தரத்தில் மாற்றி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக வைத்தே ஆகவேண்டும். கிராமப்புற மாணவர்களால், ஏழை மாணவர்களால், உயர்தரத்தில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக படிக்க முடியாது என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்துக்கு இணையாக நமது மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இன்னும் சற்று உழைத்து மாணவர்களை படிக்க வைத்தால், நிச்சயமாக நமது மாணவர்களால் படிக்க முடியும்.

 ஏற்கனவே, நிபுணர்குழு இதுபோல திருத்தப்பட வேண்டிய ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
 தமிழக அரசு உடனடியாக அந்த ஒப்புதலை கொடுத்து, மிகவும் உயர்தரத்தில் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறையின்போது தீவிரமான பயிற்சி அளிக்கும் வேலைகளை தொடங்கவேண்டும். இதையெல்லாம் உடனடியாக தொடங்கினால்தான், வருகிற கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டங்களை மாற்றமுடியும். ஒளிமயமான எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

 

 

மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர். 

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

 

இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

 

இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

 

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.

மாவட்டத்தில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத் தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டு முதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர் தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான ’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவே பெயர், பிறந்த தேதி உட்பட அனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்

இலக்கணப் பிழை திருத்தும் செயலிகள் :

Grammmarly என்ற ஆங்கில மொழிப் பயன்பாட்டில் எழுத்து, சொல், இலக்கணம் மற்றும் வாக்கியப் பிழைகள் திருத்தும் செயலி குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள் தாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக எழுதி உள்ளனர். சிலர், ”இதெல்லாம் பிழை என்றே தெரியாது. இப்படி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆங்கில மொழிப் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட, இந்த செயலி மூலம் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டு, தங்கள்
மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் பயன்படுத்துவதாக தகவல் தந்துள்ளனர்.

ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு மட்டுமல்ல, அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கூட சிரமங்கள் ஏற்படுவதுண்டு. ஒரு மொழிப் பயன்பாட்டில் இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவது சகஜமே. இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு தருவதில் சிறந்த செயலியாக இயங்கும் Grammarly குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. அதே இலக்குடன் மேலும் பல செயலிகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மொழியின் இலக்கணத்தில் எளிதாக ஒருவர் மிகப் பெரிய அளவில் புலமை பெற்றிட முடியாது. ஒவ்வொரு சொல் பயன்படுத்துவதிலும் நமக்கு சந்தேகம் ஏற்படும். அது தாய்மொழியாக இருந்தாலும் கூட. எனவே, இந்த சந்தேகங்களைத் தீர்க்கும் கம்ப்யூட்டர் டூல் இருந்தால், அது நம்மை வழி நடத்தி, நம் மொழிப் பயன்பாட்டிற்கு மெருகூட்டும். வாக்கிய அமைப்புகளைச் சீராக்கும். எழுத்துப் பிழைகள் இல்லாமல் செய்திடும். சரியான சொற்களை அமைப்பதில் வழி காட்டும். இந்த டூல்களைத் தாங்கியுள்ள தளங்களையும், அவை நமக்கு எந்த வழிகளில் உதவுகின்றன என்பதனையும் காணலாம்.
Grammarly
ஏற்கனவே தரப்பட்ட கட்டுரையில் சொல்லப்பட்ட Grammarly செயலி தான் இந்த வகையில் மிகச் சிறந்ததாகும். இது பற்றி சுருக்கமாக இங்கு தருகிறேன். நாம் ஆங்கில மொழியில் தயாரிக்கும் ஆவணங்கள், மின் அஞ்சல்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் திருத்தி அமைக்கும். வேர்ட் செயலி காட்டும் பிழைகளைக் காட்டிலும் பத்து மடங்கு அளவில் பிழைகளை இது சுட்டிக் காட்டுகிறது. முன் ஒட்டுச் சொற்கள் (preposition), சரியான வினைச்சொல் பயன்பாடு, பெயர்ச்சொல் பயன்படுத்தல், தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அனைத்து வகைகளிலும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://www.grammarly.com/. இதன் மேம்படுத்தப்பட்ட, கூடுதல் வசதிகள் கொண்ட பதிப்பு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
Ginger Grammar Checker
இணையத்தில் கிடைக்கும், ஆங்கில மொழி பயன்பாட்டினை மெருகூட்டித் தரும் ஒரு டூல் ‘ஜிஞ்சர்’ (Ginger). மேலே சொல்லப்பட்ட ‘கிராமர்லி’ போலவே, இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனைப் பெறலாம். இலக்கண மற்றும் சொல் பிழைகளை இது திருத்துகிறது. இதன் சிறப்பு, இதில் உள்ள ‘sentence rephraser’ என்னும் டூல் ஆகும். இது நீங்கள் அமைத்திடும் முழு வாக்கியத்தினைச் செம்மைப் படுத்தி அமைக்க உதவுகிறது.
இதில் கிடைக்கும் ‘Text to Speech’ என்ற டூலினைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தை எப்படி அதனை உச்சரிக்க வேண்டுமோ, அதன்படி உச்சரித்துப் பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழை திருத்தம், ஒற்றை மற்றும் பன்மை பெயர்ச் சொற்களில் பிழை திருத்தம், தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் திருத்தம் எனப் பலவகையான திருத்தங்களைச் செயல்படுத்துகிறது இந்த செயலி. இந்த வகையில், நம் தனிப்பட்ட ஆசிரியராகவே இது செயல்படுகிறது. இது ஒரு கூகுள் எக்ஸ்டன்ஷன் புரோகிராமாகவும் கிடைக்கிறது. அல்லது இணைய இணைப்பில் உங்கள் ஆவணத்தைத் திருத்திப் பெறலாம். இந்த செயலியைத் தரவிறக்கம் செய்திடhttp://www.gingersoftware.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
Paper Rater
இணையத்தில் கிடைக்கும் ஒரு வித்தியாசமான ஆங்கில மொழி திருத்தி Paper Rater. மற்ற செயலிகளைப் போல, இந்த செயலியும் எழுத்து, இலக்கண, சொல் மற்றும் வாக்கியப் பிழைகளைத் திருத்துகிறது. இதன் தனிச் சிறப்பு, இதில் காணப்படும் Vocabulary Builder என்னும் டூல் ஆகும். சொற்களைச் சரியாகப் பயன்படுத்த இந்த டூல் நமக்கு உதவுகிறது. இதன் இன்னொரு சிறப்பு, ஆங்கில மொழியினைப் பயன்படுத்துவதில், எழுதுபவர் அல்லது படிப்பவரின் நிலைக்கேற்ப, டெக்ஸ்ட்டைத் திருத்துவதாகும். கல்லூரி மாணவர், பட்டதாரி, டாக்டர் பட்ட ஆய்வாளர் என மூன்று நிலைகளில் எப்படி ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நிலைக்கேற்ப திருத்தங்களை அளிக்கிறது. கட்டுரையின் தன்மைக்கேற்பவும் திருத்தங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், உங்களுடைய கட்டுரையினைப் படித்து, மொத்தமாக மதிப்பெண் தருகிறது. இதிலிருந்து உங்கள் கட்டுரையின் மதிப்பினை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.https://www.paperrater.com/free_paper_graderஎன்னும் முகவரியில் உள்ள தளம் சென்று, உங்கள் கட்டுரையை அதில் பதித்து, தளத்தின் திருத்தங்கள் மற்றும் மதிப்பெண்ணைப் பெறலாம். அல்லது, கட்டுரை கோப்பினை அப்லோட் செய்து பெறலாம்.
After the Deadline
மிக அருமையான இலக்கண பிழை திருத்தி. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. PolishMyWriting எனவும் இதனை அழைக்கின்றனர். Word Press செயலியியைத் தயாரித்து வழங்கும் Automattic Inventions என்ற நிறுவனத்தினர், இதனைத் தயாரித்து வழங்கியுள்ளனர். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் மிகச் சிறந்த செயலி. இலக்கணப் பிழைகளைத் திருத்தி, பிழைகளின் இடத்தில் என்ன மாதிரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகிறது. இந்த செயலி, Plug in / Add on ஆகக் கிடைப்பதால், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுடன் பயன்படுத்தலாம். ஆனால், இதனை மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது. இந்த செயலியைப் பெறhttp://www.polishmywriting.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
WebSpellChecker
இந்த செயலியின் சிறப்பு, ஒரு சொல்லுக்கு அதே பொருளைத் தரும் இன்னொரு சொல்லைத் தரும். எழுத்துப் பிழைகளைத் திருத்துவதுடன், இலக்கண பிழைகளை ஆய்வு செய்து விளக்கங்களைத் தருகிறது. முதலில் குறிப்பிட்டது போல, உங்கள் கட்டுரையில் இடம் பெற்றுள்ள சொற்களுக்கான அதே பொருளைத் தரும் பிற சொற்களையும் தருகிறது. இந்த செயலியைத் திறந்தவுடன், Grammar, Spellchecker, மற்றும் Thesaurus என மூன்று டேப்களைக் காணலாம். இதில் மூன்றாவதான Thesaurus டேப்பில் கிளிக் செய்தால், சொல்லுக்கான பொருளைத் தரும் இன்னொரு சொல் (synonym) கிடைக்கும். எந்த சொற்களுக்கெல்லாம், வேறு சொற்களையும் பயன்படுத்தலாமோ, அவை எல்லாம் ஹைலைட் செய்யப்பட்டு, அவற்றைத் தேர்ந்தெடுக்கையில், அச்சொற்கள் காட்டப்படும். இந்தச் செயலியைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி:https://www.spellchecker.net/
Slick Write
இந்த Slick Write செயலி, மற்ற செயலிகள் போல இலக்கணப் பிழைகளை அவ்வளவாகத் திருத்துவது இல்லை. ஆனால், ஓர் ஆவணம் படிக்கும் அளவிற்குத் தகுதியானது தானா என்பதை Readability Score தருவதன் மூலம் காட்டுகிறது. மேலும், ஆவணத்தை நன்கு படிக்கும் அளவிற்குத் தகுதியானதாக மாற்றுவதற்குத் தேவையான அறிவுரைகளைத் தருகிறது. எனவே இலக்கணப் பிழைகளைத் திருத்திக் கொண்டு, உங்களுடைய டெக்ஸ்ட்டின் தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளைப் பெற இந்த Slick Write செயலியைப் பயன்படுத்தலாம். இதனை அதன் இணைய தளத்திலேயே பயன்படுத்தலாம். இணைய தள முகவரி:http://www.slickwrite.com/#!home
Online Correction
இந்த Online Correction டூல், உங்களின் ஆவணத்தில் எத்தனை பிழைகள் உள்ளன என்று காட்டி, அவற்றை எப்படி திருத்த வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சொற்கள், வரிகளுக்கிடையே இடைவெளி சரியாக உள்ளதா என்பதையும் எடுத்துச் சொல்கிறது. எழுத்துப் பிழைகள் சிகப்பு கோடு இடப்பட்டு காட்டப்படுகிறது. மற்ற பிழைகள், பச்சை வண்ணத்தில் கோட்டுடன் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் எட்டு மொழிகளில் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகள்) உள்ள ஆவணங்களைத் திருத்தலாம் என்பது கூடுதல் தகவல். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://www.onlinecorrection.com/
GramMark
GramMark செயலியை இணைய இணைப்பிலும், இல்லாத போதும் பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தை மிகத் தெளிவாக ஆய்வு செய்து, அதில் உள்ள செயப்படு / செயப்பாடு வினை பிழைகள் (active and passive voice errors), வாக்கியங்கள், வாக்கிய அமைப்புகள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை மிகச் சரியாகத் திருத்துகிறது. இந்த டூல் மிகவும் பாராட்டுகளைப் பெற்ற ஒன்றாகும். இதனைப் பெறhttp://grammark.org/dist/#/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள டூல்கள் அனைத்தும், நம் ஆங்கில மொழியில் அமைக்கும் ஆவணங்களைத் திருத்தி, சிறப்பாக, உயர்ந்ததாக அமைக்க நமக்கு உதவுகின்றன. நல்ல திறமையான ஆசிரியர்களைப் போல இவை இயங்குவது இவற்றின் சிறப்பாகும். இதில் நமக்குப் பழக்கமாக, எளியதாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்தலாம்

‘NEET’ மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்றஇணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

 

மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்த பிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

 

இந்த தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

”நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவரவகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம்எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு

நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்தவருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி… எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.

 

 

இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும்பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒருவகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையைஉருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

 

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒருவகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத்தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனைவெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

 

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வுமுடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள்ஒலிக்காது.

 

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடுவெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித்தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

 

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தகவாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கியபுத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.

 

 

 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமதுபாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றிஅமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும்சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம்கண்டுகொள்ளாமல்விடப்படும்!”

பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில், எந்த எண்ணை ஆய்வுக்காக பயன்படுத்துவது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

புகார்கள் வந்தன

 

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்கிறது. இதில், 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பொது தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில், பதிவு எண் இடம்பெறும். ஆனால், வெறும் பதிவு எண் மட்டும் இருப்பதால், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் உலா வருவதாக புகார்கள் எழுந்தன.

 

 

எனவே, சான்றிதழின் பாதுகாப்புக்காக, கடந்த தேர்வின் போது, 14 இலக்க தனி அடையாள எண் உருவாக்கப்பட்டு, அந்த எண், சான்றிதழில் பதிவு செய்யப்பட்டது. 

 

முடிவு செய்யப்படவில்லை 

 

இந்த ஆண்டு, 14 இலக்க தனி அடையாள எண்ணுடன், எமிஸ் என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் அடையாள எண், ஆதார் எண் மற்றும் பதிவு எண் என, நான்கு விதமான எண்களை, மாணவர்கள் பயன்படுத்த உள்ளனர்.

 

இவற்றில், எந்த எண்ணை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பயன்படுத்துவது என, பள்ளி கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. 

 

நான்கு எண்களையுமே பயன்படுத்தினால், போலிகளை தடுக்கவும், சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும், வலுவான ஆதாரமாக இருக்கும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் விரும்புகின்றனர். அது, நடைமுறைக்கு வருமான என்பது, சில நாட்களில் தெரிந்து விடும்.

குழந்தைகள் தனியாக தவித்தால் , ஆதார் மையத்திற்கு அழைத்து சென்று பெற்றோரை கண்டுபிடிக்கலாம் !!

நீங்கள் எங்காவது  சென்று வரும்போது பெற்றோர்களை பிரிந்து அழுது கொண்டிருக்கும்  சிறுகுழந்தைகள்  அவர்களது பெற்றோர் பற்றிய விபரம் சொல்லத்தெரியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் காண நேர்ந்தால் அவர்களை அருகில் உள்ள ஆதார்

மையத்திற்கு அழைத்து சென்று அவர்களது விரல் ரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோரை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை சேர்த்துவிடலாம்

ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, செய்தித்துறை இயக்குனர் மற்றும் மின்-ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் சேர்க்கை வழிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இதன் படி ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக புதன்கிழமை அன்று நிரந்தர மையங்களுக்கு நேரில் சென்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உரியத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.